அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து மாணவனை சுட்டுக் கொன்று சிறுவன் தற்கொலை
ட்ரௌட்டேல்: அமெரக்காவில் பள்ளி ஒன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த சிறுவன் மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்தார்.
அமெரிக்காவின் ஆரிகன் மாநிலம் ட்ரௌட்டேலின் போர்ட்லேண்டில் உள்ளது ரேனால்ட்ஸ் உயர் நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 2 ஆயிரத்து 800 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சிறுவன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் புகுந்து சுடத் துவங்கினான். இதில் 14 வயது மாணவர் எமிலியோ ஹாப்மேன் என்பவர் பலியானார்.
இதையடுத்து அந்த சிறுவன் பள்ளியின் கழிவறைக்கு சென்று தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் திடீர் என்று துப்பாக்கிச்சூடு நடத்துவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.