தாய்லாந்தில் காதலியை பறிகொடுத்த இளைஞர் பாம்புடன் திருமணம்
தாய்லாந்தில் காதலியை பறிகொடுத்த இளைஞர் ஒருவர் வெள்ளை நிற நாகப் பாம்பை திருமணம் செய்துள்ளார்.
தாய்லாந்து: 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காதலி பாம்பாக தற்போது வந்துள்ளார் எனக்கூறி இளைஞர் ஒரு பாம்பை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

தாய்லாந்தின் காஞ்சனாபுரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார். இதனால் மீளாத் துயரத்தில் இருந்த அவருக்கு ஒரு வெள்ளை நிற நாகப் பாம்பு பரிட்சயமாகியுள்ளது. அந்தப் பாம்பு இறந்து போன தனது காதலி போலவே இருப்பதாக கூறிய அந்த இளைஞர் அந்த பாம்பை திருமணம் செய்து கொண்டார்.

புத்த மதத்தின்படி இறந்தவர்கள் செல்லப் பிராணிகள் உருவத்தில் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என் காதலிதான் பாம்பு உருவத்தில் என்னிடம் வந்துள்ளார் என்று கூறும் அந்த இளைஞர் அந்த பாம்புடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

பாம்புடன் அமர்ந்து டிவி பார்ப்பது, சுற்றுலா தளங்களுக்கு செல்வது, கேரம் விளையாடுவது, கடைகளுக்கு செல்வது, தூங்குவது என எப்போதும் 10 அடி நீள நாகப் பாம்புடனேயே வலம் வருகிறார்.

இதனால் அப்பகுதியில் பெரும் புகழ்பெற்றுள்ள அவர், அந்த பாம்பு வந்த பிறகுதான் தன் காதலி இருந்தபோது கிடைத்த மகிழ்ச்சி கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞர் குறித்த முழு தகவலையும் டெய்லி மிரர் பத்திரிக்கைக்கு கொடுத்த அப்பகுதியை சேர்ந்த வாரனன் சரசலின் என்பவர் , அந்த இளைஞர் பாம்புடன் இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.













Click it and Unblock the Notifications