லைவ் ஓடிக்கொண்டிருக்கும்போது.. கோட் சூட்-ஐ கழற்றிய பெண் செய்தியாளர்! தாய்லாந்து ஊடகம் செய்த சம்பவம்
பாங்காக்: தாய்லாந்து செய்தி வாசிப்பாளர்கள், லைவ் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென தங்களது கோட் சூட்களை கழற்றிய சம்பவம் பரபரப்பாகியிருக்கிறது. போர் காரணமாக தாய்லாந்து அரசு எரிபொருள் தட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. இதனையடுத்து இந்த விநோத சம்பவம் நடந்திருக்கிறது.
ஈரான்-அமெரிக்கா போர் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தோனேசியாவில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிசக்தி சேமிப்பு நடவடிக்கையை அறிவித்திருக்கிறது. அதாவது நம்மூரை போலவே, தாய்லாந்திலும் எரிபொருள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. எனவே எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. மின்சார கட்டணமும் உச்சத்தை தொட்டிருக்கிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக அரசு அலுவலகங்களில், ஏசி-ஐ 26-27 டிகிரியில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக 24 டிகிரியில் வைத்தால் அடிக்கிற வெயிலுக்கு ஜில்லென்று இருக்கும். ஆனால், 27ல் வைத்தால் மின்சாரம் குறைவாகவே செலவாகும். எனவேதான் இப்படி மாற்றி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.
வெப்பநிலை அதிகரிக்கப்பட்டதால் வழக்கமான கனமான கோட்சூட்களை அணிய முடியாது. புழுக்கம் அதிகமாக இருக்கும். எனவே கோட் சூட்டை பெண் செய்தியாளர் ஒருவர் உட்பட, 3 செய்தியாளர்கள் கோட் சூட்டை கழற்றியுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளன. அதேபோல அலுவலகங்களில் ஒன்றிரண்டு மாடிகளை ஏற லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, நடந்தே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது, அவசியம் எனில் இரவு 10 மணிக்கு மேல் பெட்ரோல் பங்குகளை மூடவும் அரசு ஆலோசித்து வருகிறது.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications