புத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு!
தாய்லாந்து சிறுவர்கள் எல்லோரும் தற்போது, இன்றிலிருந்து சில நாட்களுக்கு புத்த பிட்சுக்களாக வாழ்க்கை நடத்த இருக்கிறார்கள்.
பாங்காக்: தாய்லாந்து சிறுவர்கள் எல்லோரும் தற்போது, இன்றிலிருந்து சில நாட்களுக்கு புத்த பிட்சுக்களாக வாழ்க்கை நடத்த இருக்கிறார்கள். உலக மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்கள் இதை செய்ய இருக்கிறார்கள்.
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது முழு உடல் நலத்துடன் இருக்கிறார்கள்.தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைகுள் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.
இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

புத்த மதம்
இந்த நிலையில் இந்த சிறுவர்கள் எல்லோரும் தற்போது புத்த பிட்சுக்களாக மாற இருக்கிறார்கள். ஆனால் வாழ்நாள் முழுக்க இல்லாமல் சில நாட்களுக்கு மட்டும் புத்த பிட்சுக்களாக இருப்பார்கள். இன்று இதற்காக மொட்டை அடித்து, புத்த மத வழக்கப்படி, அவர்கள் பிட்சுக்களாக மாறுவார்கள். இதற்காக பெரிய அளவில் விழா நடக்க உள்ளது.

எதற்காக
இதில் தாய்லாந்தில் மட்டுமில்லாமல் அவர்களுக்கு உலகம் முழுக்க உதவிய மக்களுக்கு நன்றி சொல்ல இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் . அவர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதன் மூலமே எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க போகிறார்கள். முக்கியமாக, மீட்பு பணியின் போது இறந்த சீல் வீரருக்கு காணிக்கை செலுத்த இருக்கிறார்கள்.

ஏன் இத்தனை நாட்கள்
மொத்தம் 9 நாட்கள் அவர்கள் புத்த மடத்தில் துறவியாக இருப்பார்கள். தாய்லாந்து குகையில் மொத்தம் அவர்கள் 7 நாட்கள் இருந்தனர். மேலும் மீட்பு பணி இரண்டு நாட்கள் நடந்தது.இதனால் கடைசி சிறுவன் 9வது நாளில் மீட்கப்பட்டான். இதனால் அவர்கள் புத்த மடத்தில் 9 நாட்கள் இருக்க போகிறார்கள்.

பயிற்சியாளர்
அந்த அணியின் பயிற்சியாளர், ஏக்பால், ஏற்கனவே ஒரு புத்த துறவி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த பத்து வருடமாக துறவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் . அவரும் அவர்களுடன் இந்த 9 நாட்கள் உள்ளே இருப்பார். அதேபோல் ஒரேயொரு கிறிஸ்துவ மாணவன் அதுல் சாம் மட்டும் இந்த துறவு வாழ்க்கையில் ஈடுபட மாட்டான் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications