எல்லாம் முடிந்தது.. இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.. கிம்மிற்கு பகீர் கடிதம் அனுப்பிய டிரம்ப்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்க இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்: வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்க இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு நாட்டு மக்களிடையே இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவர் இடையே இருந்த நட்பு மொத்தமாக முடிவிற்கு வந்துள்ளது.
சமீப காலமாக அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் நண்பர்களாக மாறிக்கொண்டு இருந்தனர். இந்த வருட தொடக்கத்தில்தான் இரண்டு பேரும் அணு ஆயுதங்களை கால் பந்து போல கற்பனை பண்ணிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்வோம் என்று பேட்டி அளித்தனர். ஆனால் ஏனோ திடீர் என்று நண்பர்கள் ஆனார்கள்.

சந்திப்பு திட்டம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருந்தனர். சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் சந்திக்க இருந்தனர். இதில் அணு ஆயுதங்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டனர். வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது குறித்து இதில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ரத்து
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம்மிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நேற்று அவர் எழுதிய கடிதத்தில், சிங்கப்பூர் சந்திப்பை ரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் இருவரும் சந்தித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். மேலும், வடகொரியா அதிபரின் மோசமான அமெரிக்காவை தாக்கக்கூடிய வார்த்தைகளால் பெரிய அளவில் மனமுடைந்து இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

காரணம்
வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவெடுத்தது. ஆனால், மொத்தமாக நாட்டில் இருந்து வெளியே எடுத்து செல்லாமல் நாட்டிற்குள்ளேயே பயன்படுத்தாமல், சோதனை செய்யாமல் வைக்க முடிவெடுத்தது. ஆனால் லிபியாவில் அணு ஆயுதங்களை கைவிட்டது போல மொத்தமாக வடகொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்க கோரிக்கை வைத்தது. இதற்கு வடகொரியா ஒப்புக்கொள்ளவில்லை. இதுதான் இப்போது பிரச்சனை ஆகியுள்ளது.

போர் அபாயம்
டிரம்ப் தனது கடிதத்தில், உலக அமைதிக்கான வாய்ப்பை வடகொரியா அதிபர் கெடுத்துக் கொண்டார். கடவுளை வேண்டிக்கொள்கிறேன், அமெரிக்கா வடகொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தும் நிலைமை வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அமெரிக்கா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications