Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: மேற்காசிய பகுதியில் கடந்த சில வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் விரைவில் குறையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ள நிலையில், சனிக்கிழமை ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேற்காசிய மோதலின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதல்கள் தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்று வந்தன.

Donald Trump Iran israel

இந்த மோதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.

ஈரான் இஸ்ரேல் போர்

குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேற்காசிய பகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது. உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திலும் இந்த மோதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

மோடி பேச்சுவார்த்தை

குறிப்பாக இந்தியாவின் மோடி, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் ஐக்கிய நாடுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புகளும் மோதலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக இந்த மோதல் நீடித்து வரும் சூழலில் முக்கிய அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

டிரம்ப் பேச்சுவார்த்தை அறிவிப்பு

ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் அனைத்து ராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அமைதிக்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் ஒரு உடன்படிக்கை எட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை

மேலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல் மார்க்கமான ஹார்முஸ் நீரிணை விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, ஈரான் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுமையான போர் அல்ல, ராணுவ நடவடிக்கையாக மட்டுமே இருப்பதாகவும் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை அமெரிக்காவும் ஈரானும் இணைந்து உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரான்-அமெரிக்க மோதல்

இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, பல வாரங்களாக நீடித்து வரும் ஈரான்-அமெரிக்க மோதல் விரைவில் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சனிக்கிழமை நடைபெற உள்ள பேச்சுவார்த்தை இந்த மோதலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+