14 நாட்களில் உருவான.. உலகின் 2வது பிரமாண்ட கொரோனோ பரிசோதனை லேப்.. அபுதாபியில் திறப்பு
ரியாத்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அபுதாபியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும்.
கொரோனா வைரஸால் ஐக்கிய அரபு நாடுகளில் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அபுதாபியில் மிகப் பெரிய கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கு 600 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.

முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு இரு முறை சோதனைக்குள்படுத்தப்படுகிறார்கள். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மிகப் பெரிய பரிசோதனை கூடத்தை தொடங்க அந்நாட்டு அமைச்சரவை கடந்த 29-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.
இதன்படி, அபுதாபியில் மஸ்தார் நகரத்தில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொரோனா சோதனை கூடம் 14 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூடம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை கூடத்தை அபுதாபியின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பிஜிஐ மற்றும் குரூப் 42 ஆகியன இணைந்து அமைத்துள்ளது. இந்த பரிசோதனை மையம் வளைகுடா நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் உதவும் என்கிறார்கள்.

இந்த பரிசோதனை கூடத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது ரியல் டைம் ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன்- பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (RT-PCR) மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்த முறை மூலம் SARV-CoV வைரஸ் தொடர்பான அறிகுறிகளை வேகமாக கண்டறிந்துவிட முடியும்.
இந்த முறையிலான சோதனைதான் சீனா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் 2,20,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. உலகிலேயே எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு அதிகமானவர்கள் சோதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய நாட்களில் கொரோனா பரிசோதனை மையத்தை ஏற்படுத்துவது, கொரோனாவை தடுப்பது உள்ளிட்ட சூட்சமங்களை சீனாவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் கற்றுக் கொண்டது. அபுதாபியில் உள்ள இந்த பரிசோதனை கூடம் உலகின் இரண்டாவது பெரிய பரிசோதனை கூடமாகும். சீனாவில் கொரோனா வைரஸ் சிகிச்சை, பரிசோதனைக்காக 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனையை கட்டியது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications