Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாட்".. 60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் ஒரு மனிதர்! வியட்நாமில் ஒரு 'சூப்பர் ஹியூமன்'.. எப்புட்றா?

ஒரு மனிதரால் எப்படி உயிர் வாழ முடிகிறது என்று தெரியவில்லை என மருத்துவர்களே ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும், உலகில் இவரை போன்று ஒரு மனிதர் இருக்க முடியாது என்றும், இவர் மருத்துவ உலகுக்கே சவால் எனவும் மருத்துவர்கள் கூற

Subscribe to Oneindia Tamil

ஹனோய்: வியட்நாமில் ஒரு மனிதர் 60 ஆண்டுகளாக தூங்காமலேயே வாழ்ந்து வரும் விஷயம் தற்போதுதான் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்தாலே அடுத்த நாளை நகர்த்துவது நம்மில் பெரும்பாலானோருக்கு நரக வேதனையை தரும் நிலையில், எப்படி ஒரு மனிதரால் இத்தனை ஆண்டுகளாக தூங்காமல் இருக்க முடியும் என மக்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

மருத்துவ உலகுக்கே சவால் விடும் அந்த சூப்பர் ஹியூமன் மனிதரின் சுவாரசியக் கதை குறித்துதான் இங்கு பார்க்க போகிறோம்.

உணவை விட முக்கியம் தூக்கம்

உணவை விட முக்கியம் தூக்கம்

மனிதன் உயிர் வாழ தேவையானது உணவு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த உணவை விட மனிதனுக்கு தேவையானதுதான் 'தூக்கம்'. சாப்பிடாமல் கூட ஒரு மாதம் வரை மனிதரால் வாழ்ந்து விட முடியும் எனக் கூறும் மருத்துவர்கள், 11 நாட்கள் ஒரு மனிதன் தூங்காமல் இருந்தால் இறந்துவிடுவான் எனக் கூறுகிறது. நாளொன்றுக்கு 6 முதல் 8 மணிநேரம் மனிதர்கள் கட்டாயம் தூங்க வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால் உடல்நிலையிலும், மனநிலையிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்

வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்


தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கையில், வியட்நாமில் ஒரு மனிதர் பல ஆண்டுகளாக ஒரு பொட்டு கூட தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. அவரது பெயர் தாய் நகோக் (80). இவரை பற்றி கேள்விப்பட்ட யூடியூப் சேனல் ஒன்று, நேரடியாக வியட்நாமுக்கு சென்று அவருடன் 10 நாட்கள் செலவிட்டு அவரது அன்றாட நடவடிக்கைகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகியதை அடுத்தே இப்படியொரு மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

"தூங்க ஆசையாக உள்ளது"

இதுகுறித்து அந்த வீடியோவில் தாய் நகோக் கூறுகையில், "நானும் சிறு வயதில் எல்லோரையும் போன்றுதான் தூங்கி வந்தேன். இந்நிலையில் 1962-ம் ஆண்டு எனக்கு 20 வயது இருக்கும் போது எனக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காய்ச்சல் வந்தது முதலாக என்னால் தூங்க முடியவில்லை. காய்ச்சல் குணமான பிறகும் எனக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் தூக்கம் இல்லாதது எனக்கு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால், சிறிது நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தூங்காமல் இருப்பது வெறுமையாக இருக்கிறது" என்கிறார் தாய் நகோக்.

மருத்துவ உலகுக்கே சவால்

மருத்துவ உலகுக்கே சவால்

இதனிடையே, தூங்காமல் இருப்பதால் இவருக்கு உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு உடலும், மனமும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 60 ஆண்டுகளாக தூங்காமல் ஒரு மனிதரால் எப்படி உயிர் வாழ முடிகிறது என்று தெரியவில்லை என மருத்துவர்களே ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும், உலகில் இவரை போன்று ஒரு மனிதர் இருக்க முடியாது என்றும், இவர் மருத்துவ உலகுக்கே சவால் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+