தஜிகிஸ்தான் நாட்டு சிறையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பயங்கர கலவரம்.. 32 பேர் உயிரிழப்பு
துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளால், இந்த கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
தஜிகிஸ்தான் தலைநகர் அருகே அமைந்துள்ள சிறையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐ.எஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினரும் உள்ளதால் குறிப்பிட்ட சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பாதுகாப்புகளுக்கிடையேயும் அச்சிறையில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள தஜிகிஸ்தான் அரசு வாக்தட் நகரத்தில் அமைந்துள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. பின்னர் அது கலவரமாகியது. ஆயுதமேந்திய சில கைதிகள் 3 சிறைக்காவலர்களையும் 5 கைதிகளையும் படுகொலை செய்தனர்.
எனவே கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் வர வைக்கப்பட்டனர். அவர்கள் வந்து கலவரம் செய்த கைதிகளுக்கிடையே சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. பாதுகாப்பு படையினர் மீது சில கைதிகள் தாக்குதல் நடத்த துவங்கினர்
நிலைமை கைமீறி போனதையடுத்து வேறு வழியின்றி கலவரத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது இந்த கலவரத்தில் மொத்தம் 3 சிறைக் காவலாளிகள் உட்பட 32 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் ஏற்பட்ட கலவரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது, மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க சிறையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications