"ஹமாஸ் போர் எப்போது தான் முடியும்.." ஒரே வரியில் இஸ்ரேல் சொன்ன பதில்! என்ன இப்படி சொல்லிட்டாங்க

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இது எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்,

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.. முதலில் கடந்த அக், 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. மேலும், பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றன.
போர் எப்போது தான் முடியும்.." ஒரே வரியி

 When Hamas war will end explains Israel Defence Minister Gallant

இதில் முதலில் சற்று தடுமாறினாலும் அதன் பிறகு இஸ்ரேல் பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.. ஹமாஸின் காசா பகுதியில் இறங்கிய இஸ்ரேல், தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

அமெரிக்கா: இந்தப் போருக்குச் சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், இது பிராந்திய போராக மாறாமல் இருக்க வேண்டும் என்பதாலேயே அனைத்து நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்துகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இஸ்ரேல் தரப்பு விளக்கமளித்துள்ளது. இஸ்ரேல் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்த பிறகே காசாவில் ஹமாஸுக்கு எதிரான இந்த போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் கூறியுள்ளார். வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் ஜபாலியா மற்றும் ஷேஜய்யா பட்டாலியன்கள் அழிக்கப்படும் விளிம்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்: இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த போர் அதன் இலக்குகளை அடையும் போது முடிவுக்கு வரும். அமெரிக்கா சொல்லும் அனைத்தையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். அதை ஆலோசனை செய்கிறோம். அமைச்சர்கள் உடன் ஆலோசனை செய்து இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

ஹமாஸ் வசம் இன்னுமே பல பிணையக் கைதிகள் இருக்கிறார்கள். நாங்கள் ராணுவ ரீதியாக அழுத்தத்தை அதிகரித்தால் கூடுதலாகப் பிணையக் கைதிகளை விடுவிக்க முடியும் என்ற நம்புகிறோம். அதை நோக்கியே நடவடிக்கை எடுப்போம். ஹமாஸ் கோட்டைகளான ஜபாலியா மற்றும் ஷேஜாயாவில் அவர்கள் அழியும் தறுவாயில் இருக்கின்றனர். இப்போது பல பகுதிகளில் ஹமாஸ் படை தொடர்ச்சியாகச் சரணடைந்து வருகிறது.

போர் விதிமுறைகள்: வெல்லவே முடியாத படைகளாகக் கருதப்பட்ட படைகளை நாங்கள் வரிசையாக வென்று வருகிறோம். அதேநேரம் போர் விதிமுறைகளை நாங்கள் மீறுவதில்லை. யார் சரணடைந்தாலும் அவரது உயிர் காப்பாற்றப்படும் சரணடைந்தோரிடம் கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணை செய்து வருகிறோம்.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை ஹமாஸ் தலைவரும் ஒன்றுதான் சாதாரண வீரனும் ஒன்றுதான். எனவே, உயிர் பிழைக்க வேண்டும் என்றால் சரணடைந்துவிடுங்கள். உங்களுக்கு வேறு வழியில்லை. கடந்த மாதத்தில் மட்டும் காசா பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்றார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மொத்தம் 7 நாட்கள் போர் நிறுத்தம் நீட்டித்த நிலையில், அப்போது ஹமாஸ் பல பிணையக் கைதிகளை விடுவித்தது. அதேபோல இஸ்ரேல் வசம் இருந்த பல பாலஸ்தீன கைதிகளையும் ஹமாஸ் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+