நோபல் பரிசு மருத்துவம் 2016: ஜப்பானை சேர்ந்த யோஷினேரி ஓஷிமிக்கு அறிவிப்பு
ஸ்டாக் ஹோம் : ஜப்பான் நாட்டின் யோஷினேரி ஓஷிமி என்ற பேராசிரியர் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2016ம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

உடல் செல்கள் தம்மை தாமே அழித்துக் கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்னும் ஆய்வு மேற்கொண்ட ஜப்பான் நாட்டின் பேராசிரியர் யோஷினேரி ஓஷிமிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றும் யோஷினேரி ஓஷிமி, ஆட்டோபேஜி எனப்படும் செல்லியல் பிரிவில் நிபுணராக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓஷிமி, 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். தற்போது டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1905ஆம் ஆண்டில் நோபல் பரிசு அளிக்கும் நிகழ்வு துவங்கப்பட்டதிலிருந்து, மருத்துவப் பிரிவில் வழங்கப்படும் 107வது விருது இதுவேயாகும்.
கரோலின்ஸ்கா கல்வி நிறுவனம், உடலின் செல்கள் தனது உள்ளடகத்தை மறுசுழற்சி செய்துகொள்ளும் முறையான ஆட்டோபேஜியில் வியக்கத்தகு பரிசோதனைகளைச் செயல்படுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கரோலின்ஸ்கா நிறுவனம் வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில், 50 வருடங்களுக்கு மேலாக ஆட்டோபேஜி என்னும் ஒரு பிரிவு அறியப்பட்டிருந்தாலும், பாராடிஜிம் ஷிப்ட் யோஷினேரியின் என்னும் ஆய்வின் காரணமாக மட்டுமே, உடலியல் மற்றும் மருத்துவத்தில் ஆட்டோபேஜியின் அடிப்படை முக்கியத்துவம் அறியப்பட்டது.












Click it and Unblock the Notifications