நகையை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டரே அதை அபேஸ் செய்ததாக பரபரப்பு புகார்
கோட்டாறு இன்ஸ்பெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: திருட்டு போன நகையைக் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், அதைப் பார்த்து ஆசை கொண்டு அப்படியே அபேஸ் செய்து தற்போது மாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கல்லுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் வேதவியாசன். தூத்துக்குடியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 2011-ம் வருஷம் இவர் வீட்டில் ஒரு கொள்ளை நடந்துவிட்டது. அப்போது வீட்டிலிருந்த நகை, பணம் எல்லாத்தையுமே மர்மநபர்கள் திருடி கொண்டுபோய் விட்டார்கள்.

போலீசில் புகார்
அதனால் காணாமல் போன நகையை கண்டுபிடித்து தரும்படி களியக்காவிளை போலீசில் வேதவியாசன் புகார் அளித்தார்.

கோர்ட்டில் வழக்கு
பிறகு "களியக்காவிளை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்த அன்புபிரகாஷ்தான், கொள்ளை போன நகைகளை மீட்டுவிட்டார் என்றும் ஆனால் மீட்ட நகையை தன்னிடம் இன்ஸ்பெக்டர் தரவில்லை" என்றும் கூறி நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு போட்டார்.

வழக்கு பதிவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 3-ம் தேதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெரும் பரபரப்பு
தற்போது கோட்டாறு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் அன்புபிரகாஷ். இன்ஸ்பெக்டர் மீதே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications