5 ஆண்டுகளாக முகமது யாசினுடன் காதல்.. கணேஷை திருமணம் செய்தும் விட மனமில்லாத காயத்ரி!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றதாக கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் மாவட்டம் வெட்டூர்ணிமடம் அருகே கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (38). புகைப்பட கலைஞர். இவருடைய மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் கடுமையாக தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். மனைவி காயத்ரியே கள்ளக்காதலால் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து காயத்ரி, கூலிப்படையை சேர்ந்த கருணாகரன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

கணேஷை கொல்ல முயற்சி
கணேஷை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்ட காரணமாக இருந்த காயத்ரியின் கள்ளக்காதலன் மதுரையைச் சேர்ந்த முகமது யாசினை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் முகமது யாசின் மதுரையில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது யாசினை போலீஸார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

திருமணமாகி ஒரு குழந்தை
அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர் பல்வேறு தகவல்களை கூறினார். மதுரையை பூர்வீகமாக கொண்ட அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவிலில்தான் வசித்து வந்தார். அந்த சமயத்தில் காயத்ரிக்கும் முகமது யாசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் முகமது யாசினுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது தெரியவந்தது.

கணேஷுடன் திருமணம்
இந்த நிலையில் பீச் ரோடு பகுதியில் மழலையர் பள்ளியை முகமது யாசின் தொடங்கியுள்ளார். அங்கு பள்ளிக்கு காயத்ரியை மேலாளராக நியமித்துள்ளார். இவருடைய காதல் விவகாரம் காயத்ரியின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததை அடுத்து உடனடியாக மாப்பிள்ளை பார்த்து காயத்ரிக்கு கணேஷை கட்டி வைத்துள்ளார்கள்.

யாசின்
திருமணத்திற்கு பிறகும் இந்த காதல் கள்ளக்காதலாக தொடர்ந்துள்ளது. தினமும் யாசினுடன் காயத்ரி செல்போனில் பேசி வந்துள்ளார். தனது கணவன் வீட்டை அடமானம் வைத்து ரூ 10 லட்சத்தை முகமது யாசினுக்கு கொடுத்துள்ளார். இந்த பணம் குறித்து காயத்ரியிடம் கணேஷ் கேட்ட போதுதான் ஆட்களை வைத்து கொள்ள பார்த்துள்ளார். இதையடுத்து கைதான யாசினை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications