பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!
கரூர்: பாஜக என்பது தமிழ்நாடு மக்களால் வெறுக்கப்படுகிறது என்பதால் ஒருபோதும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற உண்மையை அண்ணாமலை ஆறு வருடத்திற்கு பிறகு உணர்ந்திருக்கலாம், அதன் அடிப்படையில் பாஜகவில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஆரம்பிக்க முயற்சி செய்யலாம் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார்.
கரூரில் உள்ள பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்," தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடக்கின்ற முதல் ராஜ்யசபா தேர்தல் ஒரு இடம் காலியாக உள்ளது.
மிகவும் பெருந்தன்மையுடன் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி கட்சிக்கு ராஜ்யசபா சீட்டு ஒதுக்க வேண்டும் என்றும் அதை பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜோதிமணி
சிதம்பரம் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் முறைப்படி யாருக்கு கொடுக்க வேண்டும் என்று ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார்கள். ராஜ்யசபா சீட்டை பொருத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முடிவெடுப்பார்கள் தமிழ்நாட்டில் பொறுப்பாளர்கள் ராஜ்யசபா வேட்பாளர்களை முடிவு எடுப்பதில்லை. ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான சூழலில் ராஜ்யசபாவில் தமிழ்நாட்டின் குரல் ஒழிக்க வேண்டியது முக்கியம்.
ராஜ்யசபா சீட்
ராஜ்யசபா சீட்டைப் பொறுத்தவரை பாஜக சின்ன பின்னம் படுத்தி விடுகிறது. ஆம் ஆத்மி 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை பாஜக கட்சியில் ED போன்றவர்களை வைத்து மிரட்டி சேர்த்துள்ளனர். ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை எந்த கட்சிகளாக இருந்தாலும் மதிக்க வேண்டும் இதுதான் நீண்ட காலம் மக்களுக்கு நல்லது. தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை புதிய கட்சி மூன்றாண்டுகளில் மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று இருக்கிறார்கள்.
மாநிலங்களவை தேர்தல்
மக்கள் சாதி பணம் பல்வேறு விஷயங்களை கடந்து வெற்றி அடைந்துள்ளனர் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் இடத்தில் நாம் இருக்கிறோம் இந்த அரசியல் சூழலில் நல்ல விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்ற ஆக்கபூர்வமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்
மின்சாரத்துறை
மின்சாரத்துறை பொறுத்தவரைக்கும் அமைச்சர் ஆய்வு நடத்தி அதிகாரிகளை பணியிட நீக்கம் செய்துள்ளனர். ஒரு அரசாங்கம் குறிப்பிட்டு சிறிது நாட்களே ஆகி உள்ளது அவர்களுக்கு கால வாசம் வழங்க வேண்டும் எல்லாத் துறைகளிலும் புதிதாக அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். அமைச்சரவையில் அரசாங்கத்தில் முன் அனுபவம் இல்லாமல் அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். துறை ரீதியாக அதிகாரிகளை கலைத்து கூட்டம் நடத்தி புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
திமுக
தமிழக வெற்றி கழகத்தை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து அதை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது போன்ற அபத்தமான குற்றச்சாட்டுகளை பாஜக சொல்லக்கூடாது. பாஜக கட்சியில் இருக்கக்கூடியவர்களே முன்னாள் மாநில தலைவரே வெளியே செல்கிறார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கட்சியை சென்று பார்க்க வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளை தொடங்க சொல்லி வந்தால் ஐந்து ஓட்டுகள் கூட போட மாட்டார்கள். பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது மிகப்பெரிய கவலை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
பாஜக
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்பது மன வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த குற்றங்களை பொறுத்தவரை எந்த ஆட்சியாக இருந்தாலும் தவெக, திமுக, பாஜக, காங்கிரஸ் இருந்தாலும் ஒரே நிலைப்பாடு தான் எடுக்க முடியும் சட்டபூர்வமான அணுகுமுறையால் மட்டுமே பிரச்சனைகளை முழுமையாக தீர்த்து விட முடியாது கடுமையான சட்டம் இருக்க வேண்டும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அந்த தண்டனைகளை விரைவாக அளிக்க வேண்டும் குற்றங்கள் நடக்காமல் தடுக்க ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு?














Click it and Unblock the Notifications