Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மாஜி எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி கஸ்டடியில் விசாரிக்க அனுமதி! கூடவே முக்கிய நிபந்தனை

Subscribe to Oneindia Tamil

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

AIADMK MR Vijayabaskar cbcid

சிபிசிஐடி போலீசாரால் தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார் விஜயபாஸ்கர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சசூரில் பதுங்கி இருப்பதாகவும், அவர் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வருவதாகவும் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார் விஜயபாஸ்கர்.

பின்னர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 17ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அதேசமயம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் தீவிரமாக இருக்கும் சிபிசிஐடி போலீசார், சொத்து ஆவணங்கள் மோசடி தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், நீதிபதி இதில் சில நிபந்தனைகளையும் பிறப்பித்தார். எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவரது தரப்பினர் உடன் இருக்கலாம். ஆனால் விசாரணைக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+