''தீபாவளிக்கு புத்தாடை எடுக்கமாட்டேன்.. அம்மா இறந்த பிறகு எந்த பண்டிகையும் இல்லை''! -ஜோதிமணி எம்.பி.
கரூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தீபாவளி பர்ஸேஸ் எல்லாம் முடிந்துவிட்டதா என்றும் கொண்டாட்டங்கள் பற்றியும் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எம்.பி.யிடம் பேசினேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;
புத்தாடை எடுக்கமாட்டேன்: ''தீபாவளியை பொறுத்தவரை மற்றொரு நாளாக தான் கடந்து போய்விடுவேன். புத்தாடைகள் எடுப்பதோ, அன்றைய தினம் அசைவ உணவு சாப்பிடுவதோ என எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடமாட்டேன். சொந்தக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பூர்வீக வீட்டில் இருப்பேன். அவ்வளவு தான் எனது தீபாவளி. அம்மா இறந்து 6 வருடங்களாகிவிட்டது, இந்த 6 வருடங்களுமே நான் பெரிதாக எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவதில்லை. எனக்கென்று இருந்த ஒரே ஆதரவு அம்மா, அவர்களே இல்லாத போது பண்டிகைகள் கொண்டாட எப்படி மனம் வரும்.''

ஆட்டுக்கறி -கோழிக்கறி: ''சிறு வயது தீபாவாளி கொண்டாட்டங்களை பற்றி வேண்டுமானால் சொல்கிறேன், தீபாவளி வந்துவிட்டாலே அப்புச்சி புத்தாடைகள் எடுத்துக் கொண்டு வந்து எங்க வீட்டில் கொடுத்துவிடுவார். ஆட்டுக்கறி, கோழிக்கறி என காலையிலேயே வீடு கமகமக்கும். 4 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க அப்புச்சி எழுப்பிவிடுவார். அப்ப மட்டும் ஏன்டா தீபாவளி வந்துச்சுன்னு தோனும். குளித்து புத்தாடைகள் அணிந்தவுடன் பட்டாசுகள் வெடிக்க போய்விடுவேன். பட்டாசு வெடிப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.''
அது ஒரு காலம்: ''குறிப்பாக கையில் பட்டாசை பற்ற வைத்து அதை தூக்கி எறிவேன். இதனால் எங்கம்மா தீபாவளி அன்று பதற்றத்துடன் என்னை கண்காணித்தப்படியே என் கூட நிற்பார்கள். அதெல்லாம் ஒரு காலம். நினைவுகள் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. அப்புச்சி, அம்மா, மாமா, என உறவினர்களோடு சேர்ந்து பள்ளிப்பருவத்தில் தீபாவளி கொண்டாடியதை என்னால் எந்நாளும் மறக்கமுடியாது. நான் தீபாவளியை கொண்டாடவிட்டாலும் பொங்கல் மட்டும் ஒரு நாள் கொண்டாடுவேன். ''
இவ்வாறு கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தனது தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றியும் பழைய நினைவலைகளையும் பகிர்ந்துகொண்டார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications