''தீபாவளிக்கு புத்தாடை எடுக்கமாட்டேன்.. அம்மா இறந்த பிறகு எந்த பண்டிகையும் இல்லை''! -ஜோதிமணி எம்.பி.
கரூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தீபாவளி பர்ஸேஸ் எல்லாம் முடிந்துவிட்டதா என்றும் கொண்டாட்டங்கள் பற்றியும் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எம்.பி.யிடம் பேசினேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;
புத்தாடை எடுக்கமாட்டேன்: ''தீபாவளியை பொறுத்தவரை மற்றொரு நாளாக தான் கடந்து போய்விடுவேன். புத்தாடைகள் எடுப்பதோ, அன்றைய தினம் அசைவ உணவு சாப்பிடுவதோ என எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடமாட்டேன். சொந்தக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பூர்வீக வீட்டில் இருப்பேன். அவ்வளவு தான் எனது தீபாவளி. அம்மா இறந்து 6 வருடங்களாகிவிட்டது, இந்த 6 வருடங்களுமே நான் பெரிதாக எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவதில்லை. எனக்கென்று இருந்த ஒரே ஆதரவு அம்மா, அவர்களே இல்லாத போது பண்டிகைகள் கொண்டாட எப்படி மனம் வரும்.''

ஆட்டுக்கறி -கோழிக்கறி: ''சிறு வயது தீபாவாளி கொண்டாட்டங்களை பற்றி வேண்டுமானால் சொல்கிறேன், தீபாவளி வந்துவிட்டாலே அப்புச்சி புத்தாடைகள் எடுத்துக் கொண்டு வந்து எங்க வீட்டில் கொடுத்துவிடுவார். ஆட்டுக்கறி, கோழிக்கறி என காலையிலேயே வீடு கமகமக்கும். 4 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க அப்புச்சி எழுப்பிவிடுவார். அப்ப மட்டும் ஏன்டா தீபாவளி வந்துச்சுன்னு தோனும். குளித்து புத்தாடைகள் அணிந்தவுடன் பட்டாசுகள் வெடிக்க போய்விடுவேன். பட்டாசு வெடிப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.''
அது ஒரு காலம்: ''குறிப்பாக கையில் பட்டாசை பற்ற வைத்து அதை தூக்கி எறிவேன். இதனால் எங்கம்மா தீபாவளி அன்று பதற்றத்துடன் என்னை கண்காணித்தப்படியே என் கூட நிற்பார்கள். அதெல்லாம் ஒரு காலம். நினைவுகள் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. அப்புச்சி, அம்மா, மாமா, என உறவினர்களோடு சேர்ந்து பள்ளிப்பருவத்தில் தீபாவளி கொண்டாடியதை என்னால் எந்நாளும் மறக்கமுடியாது. நான் தீபாவளியை கொண்டாடவிட்டாலும் பொங்கல் மட்டும் ஒரு நாள் கொண்டாடுவேன். ''
இவ்வாறு கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தனது தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றியும் பழைய நினைவலைகளையும் பகிர்ந்துகொண்டார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications