கிருஷ்ணகிரியில் கொள்முதல் செய்ய ஆளில்லை.. 2 ஆயிரம் லிட்டர் பாலை கல்குவாரியில் கொட்டிய வியாபாரி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் வியாபாரி ஒருவர் கல்குவாரியில் பாலை கொட்டினார். இல்லாதவர்களுக்காவது கொடுத்திருக்கலாமே என சமூகஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேகுளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பாலை பெற்றுச் சென்று, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்வது வழக்கம்.
ஆனால் இப்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்வது 50 சதவீதம் அளவுக்கு குறைத்துக் கொண்டன.

பால் நிறுவனங்கள்
இந்த நிலையில் மாதேஷ், விவசாயிகளிடமிருந்து பெற்றுச் சென்ற 2 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்ய தனியார் நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி மாதேஷ், வேறு சில தனியார் பால் நிறுவனங்களை அணுகி உள்ளார்.

பால் கெட்டு போகும்
அவர்களும் பாலை கொள்முதல் செய்யவில்லை. இரு தினங்கள் சுற்றித் திரிந்த பிறகும் பாலை கொள்முதல் செய்ய எவரும் முன் வராததால் பால் கெட்டுப் போகும் நிலை உருவானது. இதற்கு மேலும் வைத்து கொண்டிருந்தால் பால் தாங்காது என மாதேஷ் கருதினார்.

வாட்ஸ் ஆப்
இதையடுத்து வேறு வழியின்றி பாலேகுளி பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் 2 ஆயிரம் லிட்டர் பாலையும் கீழே கொட்டி அழித்தார். இந்த வீடியோ காட்சிகளை நண்பர்கள் மூலம் பதிவு செய்த மாதேஷ், அதனை வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டுள்ளார்.

அதிர்ச்சி
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால், 2 ஆயிரம் லிட்டர் பாலை கல்குவாரியில் கீழே கொட்டி அழித்த சம்பவம், விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலை குவாரியில் கொட்டுவதற்கு பதிலாக அதன் தரத்தை சோதனை செய்து இல்லாதவர்களுக்கு கொடுத்திருக்கலாமே என சமூகவலைதளங்களில் ஒரே பேச்சாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications