இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகள்.. ஒன்றுவிடாமல் பட்டியலிட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம்
Recommended Video
லண்டன்: இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகளை ஒன்றுவிடாமல் பட்டியலிட்டது ஐரோப்பிய யூனியன் தீர்மானம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது.
அந்த கூட்டத் தொடரில் 5 பக்கங்கள் கொண்ட தீர்மானத்தை 150-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தாக்கல் செய்யவுள்ளனர். இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகளை ஒன்று விடாமல் ஐரோப்பிய யூனியன் பட்டியலிட்டது.

தேசிய மக்கள் பதிவேடு
அதில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தும் ஒன்றாகும். உத்தரப்பிரதேசத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனுபவித்த கொடுமைகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டால் மக்கள் படும் துயரம் ஆகியவை பட்டியலிடப்பட்டன. தேசிய மக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்தியா
இந்த சட்டம் மிகப் பெரிய மனித துயரத்தை ஏற்படுத்தும். குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை பல அரசியல் தலைவர்கள் இழிவுப்படுத்துகின்றனர். இந்த சட்டம் மூலம் கோடிக்கணக்கான முஸ்லீம்கள் இந்திய குடியுரிமை பெறும் சம வாய்ப்புக்கான அடிப்படை உரிமைகளை அகற்றும் காரணியை இந்தியா உருவாக்கிவிட்டது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசு
இந்த தீர்மானம் குறித்து அடுத்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன் பின்னர் தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் அதுகுறித்த நகல் இந்திய அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

வாக்கெடுப்பு
ஐரோப்பிய யூனியன் தாக்கல் செய்யவுள்ள தீர்மானங்களால் இந்தியாவுக்கு மிகப் பெரிய அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் பிரசல்ஸில் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். காஷ்மீர் விவகாரம் குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications