நியாயம் கிடைக்காது.. இந்தியா சென்றால் தற்கொலை செய்து கொள்வேன்.. மிரட்டல் விடுத்த நீரவ் மோடி!
இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது, என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
லண்டன்: இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது, என்று நீரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர் லண்டனில் கைதானார்.
இவர் வழக்கு லண்டனில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இவர் லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
ஐஐடி மாணவர்களை வேலைக்கு எடுக்கத் தயங்கும் கம்பெனிகள்! காரணம் பொருளாதார மந்த நிலை!

பெயில் வேண்டும்
இந்த நிலையில் நீரவ் மோடி ஐந்தாவது முறையாக பெயில் வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். 4 முறை இவரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனால் ஐந்தாவது முறையாக மீண்டும் அவர் மனுதாக்கல் செய்தார்.

மீண்டும் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதில் ஆஜரான நீரவ் மோடி, தான் இருக்கும் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அதிக கொடுமை நடக்கிறது. அங்கு எல்லோரும் என்னை மோசமாக நடத்துகிறார்கள். என்னை மோசமாக தாக்கினார்கள்.

பேசினார்
ஜெயில் கைதிகள் என்னுடைய அறைக்குள் வந்து இதுவரை மூன்று முறை மோசமாக தாக்கி இருக்கிறார்கள். எனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். என்னால் இந்தியாவிற்கு செல்ல முடியாது. இந்தியாவில் நியாயமான முறையில் விசாரணை நடக்காது.

இங்கேயே இருக்கிறேன்
நான் இங்கேயே இருக்கிறேன். இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது, என்று நீரவ் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications