Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்காரம் செய்த பாகிஸ்தான் கும்பல்.. சிறுமியை காப்பாற்ற லண்டனில் திரண்ட 300 சீக்கியர்கள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மேற்கு லண்டனில் 16 வயது சீக்கியச் சிறுமி ஒருவரை, பாகிஸ்தான் கும்பலால் ஏமாற்றப் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கிடையே 200க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தினர் ஒன்றிணைந்து அச்சிறுமியை மீட்டனர். பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், அச்சிறுமி தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டார் இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பிரிட்டன் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய தென்கிழக்கு நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். பலர் தலைமுறை தலைமுறையாகவும் கூட பிரிட்டனிலேயே வசித்து வருகிறார். மேலும், அங்குச் சீக்கிய சமூகத்தினரும் கூட கணிசமான அளவுக்கு வசித்து வருகிறார்கள்.

UK Pakistan

சிறுமி பலாத்காரம்

லண்டனில் பாகிஸ்தான் கேங்கை சேர்ந்த ஒருவர் சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்துள்ளான். அவனிடம் இருந்து குழந்தையை மீட்க அங்கிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சீக்கியப் பத்திரிகையாளர் சங்கம் இது தொடர்பாகக் கூடுதல் தகல்களைப் பகிர்ந்துள்ளது.

மேற்கு லண்டன் பகுதியில் வசித்து வரும் அந்தச் சிறுமிக்கு 13 வயதாக இருந்தபோதே பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த நபர் பழக ஆரம்பித்துள்ளார். அந்த சிறுமிக்கு 16 வயது ஆன உடனேயே குடும்பத்தை விட்டு வரும்படி வலியுறுத்தியுள்ளார். அந்த பெண்ணும் நம்பி வந்துள்ளார். இருப்பினும், அதன் பிறகு அவரை வேறு சிலரும் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது!

இது குறித்து ராகேஷ் கிருஷ்ணன் சிம்ஹா என்பவர் தனது ட்விட்டரில், "16 வயது சீக்கியச் சிறுமியை பாகிஸ்தானைச் சேர்ந்த 40 வயது நபர் ஏமாற்றி அழைத்து வந்துவிட்டார். தனது குடியிருப்பில் மேலும் ஆறு பாகிஸ்தானிய ஆண்கள் இணைந்து அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்தனர். தங்கள் மகளை மீட்க 200க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தினர் அங்குக் கூடினர். அவர்கள் வாள்களையோ அல்லது கிர்ப்பான்களையோ கொண்டு வரவில்லை. அவர்கள் தங்கள் தடிகளைக் கூட எடுத்து வரவில்லை. அவர்களைக் கதவுகளை உடைக்கவோ, கலவரம் செய்யவோ இல்லை. போலீசாரை தாக்கவில்லை.. வன்முறையில் ஈடுபடவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

முதலில் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தச் சிறுமி எந்தவொரு புகாரும் சொல்லாததால் சட்ட ரீதியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனச் சொல்லியுள்ளனர். இருப்பினும், போராட்டம் பல மணி நேரமாகத் தொடர்ந்ததால் வேறு வழியில்லாமல் அந்த நபரைக் கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சிக்கல் என்ன

பிரிட்டனைப் பொறுத்தவரை அங்கு 16 வயதானாலே வீடுகளை விட்டு வெளியேறும் உரிமை இருக்கிறது. பெற்றோர் நினைத்தாலும் அவர்களைத் தடுக்க முடியாது. மேலும், உடலுறவுக்குச் சம்மதம் தெரிவிக்கும் சட்டப்பூர்வ வயதும் 16ஆக இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளிக்காத வரை போலீசாரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இதுபோல சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் சிறுமியைக் காதலிப்பதாகச் சொல்லி மூளைச்சலவை செய்து வைத்திருப்பார்கள். இதனால் பலாத்காரத்திற்கு உட்பட்டாலும் கூட அவர்கள் புகாரளிக்க மாட்டார்கள். இதனால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்படுவதாகப் பிரிட்டன் போலீசார் கூறுகிறார்கள்.

பிரிட்டன் அரசு

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதை ஒப்புக்கொண்டார். இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த கும்பல்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். ரோதர்ஹாம், ரோச்டேல் மற்றும் டெல்ஃபோர்ட் போன்ற நகரங்களில், பெரும்பாலும் பாகிஸ்தான் கும்பல் இந்தச் செயலைச் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+