கல்விக்கு முக்கியத்துவம்.. போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: சாமானிய மக்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவை நனவாக்க உத்தரப் பிரதேச மாநில அரசு இலவச கோச்சிங் தருகிறது எனவும், பாஜக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இந்த மாநிலத்தில் யாரும் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது கிடையாது. ஆனால் யோகி ஆதித்யநாத் இதனை முறியடித்து 7வது ஆண்டாக முதலமைச்சராக நீடித்து வருகிறார். இந்நிலையில் ஏராளமாக திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, போட்டி தேர்வுக்கான கூடுதலான இலவச கோச்சிங் சென்டர்களையும் புதியதாக தொடங்கி வைத்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேச அரசாங்கத்திற்கு கல்வி முக்கியமான ஒன்று. கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத சாமானிய மக்களுக்கு இந்த அரசு உதவி செய்து வருகிறது. தனியார் பயிற்சி பெற முடியாதவர்களுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை மாநில அரசு நடத்தி வருகிறது.
முதலமைச்சரின் அபியுதாய் யோஜனா திட்டத்தின் கீழ் இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி, தங்கள் கனவுகளை நனவாக்கலாம். சிவில் சர்வீசஸ் (IAS), மாகாண சிவில் சர்வீஸ் (PCS), தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA), UPPSC/Subordinate Service Selection Commission, Combined Defence Services Examination போன்ற போட்டித் தேர்வுகளுக்கு நேரடி வகுப்புகளும் (CDA), கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) போன்ற தேர்வுகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதன் மூலம் நமது மாநிலத்தின் கல்வியறிவு மேலும் உயரும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications