ராமர் காட்டுக்கு சென்ற பாதை... உபியில் 4 தேசிய நெடுஞ்சாலைகள் குறுக்கே கட்ட... மத்திய அரசு முடிவு
லக்னோ: ராமர் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றதாகக் கருதப்படும் பாதையைக் கட்டமைக்கச் சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்குப் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று இதற்குத் தேவையான நிதி மக்களிடம் இருந்து திரட்டப்பட்டு வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமாயணத்தின் படி ராமர் தன் தந்தையின் கட்டளைப்படி, மனைவி சீதை மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் 14 ஆண்டுகள் காட்டில் இருந்தார். இதற்காக அயோத்தியிலிருந்து, தனது மனைவி மற்றும் சகோதரருடன் அவர் சித்ரகூட் என்ற இடத்துக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், அயோத்தியிலிருந்து சித்ரகூட்டிற்கு ராமர் சென்றதாக நம்பப்படும் 210 கிலோமீட்டர் பாதையைக் கட்டமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பாதை பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாகக் கட்டமைக்கப்பட உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பாதை தேசிய நெடுஞ்சாலைகள் NH-28, NH-96, NH-731A ஆகியவற்றுக்குக் குறுக்கே செல்கிறது. மேலும், ஸ்ரீன்வர்பூரில் கங்கா நதியின் மேலும் செல்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது மாநிலத்தில் ராமர் பாதையை கட்டமைக்க மத்திய சாலை துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல சத்தீஸ்கர் முதல்வரும் தனது மாநிலத்தில் ராமர் காட்டுக்குச் சென்ற பாதை உருவாக்கப்பட்டு, அவை சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications