Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணம் ஆன பெண்ணை.. பம்ப் செட்டுக்குள்.. 5 நாள் அடைத்து வைத்து.. தொடரும் உத்தர பிரதேச அட்டகாசம்

பெண்ணை கடத்தி நாசம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: கல்யாணம் ஆன பெண்ணை கடத்தி சென்று.. பம்ப் செட்டுக்குள் அடைத்து வைத்து.. 5 நாட்களும் நாசம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்!! உத்திரபிரதேசத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு வெளியானது.. அப்போது, இந்தியாவிலேயே உத்திர பிரதேசத்தில்தான் அதிக அளவு பாலியல் தொல்லை நடப்பதாக ஒரு கணக்கு தெரிவிக்கப்பட்டது.. அதிகபட்சமாக 56,011 வழக்குகள் 2017-ம் ஆண்டில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த 2 வருடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஏராளமான பெண்கள் பலாத்காரம் செய்வது என்பது போய், அவர்களை உயிரோடு கொளுத்தி தீ வைப்பது என்ற பயங்கரமும் அங்கு நடந்து வருகிறது.

விஷால் சரோஜ்

விஷால் சரோஜ்

இப்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.கல்யாணம் ஆன பெண்ணை.. கடத்தி பம்ப்செட்டுக்குள் அடைத்து வைத்து 5 நாளும் பலாத்காரம் செய்துள்ளனர் கொடூரர்கள்! படோஹி என்ற மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 18 வயதான அவருக்கு 3 மாதத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது. அதே கிராமத்தை சேர்ந்த விஷால் சரோஜ் என்பவர், 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் மாமியார் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அடைத்து வைத்தார்

அடைத்து வைத்தார்

பெண்ணின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை.. உடனே கூட்டி வர சொன்னார்கள் என்று பொய் சொல்லவும், மாமியாரும் புது மருமகளை அனுப்பி வைத்தார். அப்பாவுக்கு என்ன ஆச்சோ என்று பதறியபடியே சென்ற, அந்த பெண்ணை இளைஞர் கடத்திவிட்டார்.. ஒரு பம்ப்பெட் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. மொத்தம் 5 நாள் அந்த பெண்ணை அடைத்து வைத்து சீரழித்துள்ளார்.

பம்ப்செட்

பம்ப்செட்

இதனிடையே, சம்மந்திக்கு உடல்நிலையை விசாரிக்க மாமியார் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போதுதான் மகள் வரவில்லை என்று அவர்கள் சொன்னார்கள்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் சொன்னார்கள். அதனடிப்படையில் விசரணை மேற்கொண்ட போலீசார், சரோஜுக்கு சொந்தமான விவசாய நிலத்தில், பம்ப்செட்டில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டனர்.

பரிசோதனை

பரிசோதனை

அந்த பரந்து விரிந்த நிலத்தின் நடுவில் உள்ளது பம்ப்செட் அறை.. மேலோட்டமாக பார்த்தால் யாருக்குமே சந்தேகம் வராது.. இப்போது சரோஜ் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. பாதிக்கப்பட்ட பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தை அதிர வைத்துள்ளது.. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் அட்டூழியங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+