ஜெய்ஸ்ரீராம் சொல்லாததால் தீ வைப்பு என சிறுவன் வாக்குமூலம்.. பொய் என போலீஸார் மறுப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தில் 15 வயது முஸ்லீம் சிறுவன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல மறுத்ததால் அவர் மீது 4 பேர் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்தாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது முஸ்லீம் சிறுவன். இவரை 4 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் கடத்தி ஹாதீஜா என்ற கிராமத்தில் அடைத்துவைத்தது.
பின்னர் அந்த சிறுவனை ஜெய்ஸ்ரீராம் என சொல்லுமாறு அந்த 4 பேரும் மிரட்டினர். எனினும் சிறுவன் முஸ்லீம் என்பதால் அதை சொல்ல மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அந்த சிறுவன் மீது தீ வைத்தனர்.

வாக்குமூலம்
இதில் 60 சதவீத காயங்களுடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் போலீஸாரோ இந்த வாக்குமூலத்தை மறுக்கின்றனர்.

மாற்றுக் கருத்து
இதுகுறித்து சந்தாலி மாவட்ட போலீஸார் கூறுகையில் அந்த சிறுவன் சொல்வது பொய். அவராகவே தன் மீது தீவைத்துக் கொண்டார். 45 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான கருத்தை கூறி வருகிறார்.

கும்பல்
சிறுவன் கூறிய இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தோம். ஆனால் அதில் சிறுவன் எந்த இடத்திலும் இல்லை. அந்த சிறுவன் முதலில் கூறிய போது மகாராஜ்பூர் கிராமத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட தன்னை 4 பேர் கொண்ட கும்பல் வயல்வெளியில் இழுத்து தள்ளியது.

திசை
பின்னர் தன் மீது தீவைத்ததாக கூறியுள்ளார். அதன் பின்னர் மருத்துவமனையில் தன்னை மோட்டார் சைக்கிளில் கடத்தி ஜெய்ஸ்ரீராம் கூறாததற்காக தீவைத்ததாக கூறியுள்ளார். இது போல் இருவேறு கருத்துகளை கூறி வருகிறார். மேலும் சிறுவன் கூறிய மகாராஜ்பூர் மற்றும் ஹாதீஜா ஆகிய கிராமங்கள் வெவ்வேறு திசைகளில் உள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications