மக்கள் சேவையில் குறை இருக்கக் கூடாது.. அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: மக்களின் குறைகளுக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இதில் ஏதாவது அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறினார்.
உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக உத்தர பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி விரைவில் உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சுமார் 200 பேரிடம் புகார் மனுக்களை யோகி ஆதித்யநாத் வாங்கினார்.
பின்னர் அதிகாரிகளிடம் பேசிய யோகி ஆதித்யநாத், மக்களின் குறைகளுக்கு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும். இதில் ஏதாவது அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். முன்னதாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய யோகி ஆதித்யநாத், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். யோகி ஆதித்யநாத்திடம் மனு அளித்தவர்களின் பெரும்பாலானவர்கள், தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் உதவி அளிப்பதற்காகத்தான் அரசு உள்ளது எனவும் உறுதி அளித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications