இதென்னப்பா புதுக்கதையா இருக்கு.. சரக்கு போட்டா தான் ‘ உருளை’ நல்லா வளருமாம்!
மது தெளித்தால் உருளை நன்கு வளரும் என்ற வதந்தி உத்தரப் பிரதேசத்தில் பரவியுள்ளது.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மதுபானம் தெளித்தால் உருளைக்கிழக்கு செழிப்பாக வளரும் என பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷெஹர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகஅளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. குளிர் சீசனான தற்போது பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.
வழக்கமாக உருளைக்கிழக்கு நோய்ப் பாதிப்பிற்கு அதிக எடையுடன் வளர சில குறிப்பிட்ட மருந்துகள் தெளிக்கப்படுவது வழக்கம்.

பரவிய வதந்தி:
இந்நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் வதந்தி ஒன்று பரவியது. அதாவது, உருளைக்கிழங்கு செடிக்கு மதுபானத்தை மருந்தாகத் தெளித்தால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என விஷமிகள் சிலர் வதந்தியைப் பரப்பினர்.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்:
இதனை உண்மையென்று நம்பிய விவசாயிகள், மதுபானத்தை உரமாக உருளைக்கிழங்கிற்கு தெளித்து வருகின்றனர். ஆனால் இப்படி செடிக்கு மதுபானம் தெளிப்பதால், விளைச்சலில் மாற்றம் இருக்காது என்பது தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் கருத்து.

இது தான் காரணம்:
இது குறித்து அவர்கள் கூறுகையில் ‘‘விவசாயிகளை திசை திருப்பும் வகையில் சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்தியை பரப்பியுள்ளனர். இதற்கு அறிவியல் ரீதியான எந்த ஆதாரமும் இல்லை. உருளைக்கிழங்கு செடிக்கு உரிய உரம் இட வேண்டும். விவசாயிகள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

மது விற்பனை அதிகரிப்பு:
இது ஒருபுறம் இருக்க, விவசாயிகள் அதிக அளவில் உரத்திற்காக மதுபாட்டில்கள் வாங்குவதால், அப்பகுதியில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உருளை நன்கு வளர்கிறதோ இல்லையோ, மது விற்பனை நன்றாக வளர்ந்து வருகிறது என்கின்றனர் அப்பகுதி அதிகாரிகள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications