Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபி தேர்தல்.. லக்கிம்பூர் கேரியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு! வாக்களித்தார் அமைச்சர் அஜஸ் மிஸ்ரா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் சர்ச்சையான லக்கிம்பூரில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் 403 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஒரு கட்சி குறைந்தது 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

உ.பி-இல் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. அங்கு எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

இதற்காக அக்கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் உத்தரப் பிரதேசத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக, பிரதமர் மோடியே உத்தரப் பிரதேச தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு இருந்தே, அங்குச் சென்று பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி நேரடியாகத் தொடங்கி வைத்தார். இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 லக்கிம்பூர் சம்பவம்

லக்கிம்பூர் சம்பவம்

குறிப்பாக, விவசாய சட்டங்கள் காரணமாகவும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக கையாண்ட விதத்திலும் அங்குள்ள விவசாயிகள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதிலும் லக்கிம்பூர் கேரியில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை மோதியதாக விவசாயிகள் கூறுகின்றனர். இச்சம்பவத்திற்காக அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்திய போதிலும், அவர் அமைச்சரவையில் தொடர்கிறார். இதுவும் கூட விவசாயிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 அஜய் மிஸ்ரா

அஜய் மிஸ்ரா

லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் மொத்தம் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கூட நீண்ட நாட்களுக்குப் பின்னரே கைது செய்யப்பட்டார். சில வாரங்கள் சிறையில் இருந்த அவருக்கு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், கடந்த வாரம் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது லக்கிம்பூர் பகுதி மக்களை ஆத்திரப்படுத்தியது.

 பல முனை போட்டி

பல முனை போட்டி

இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் இன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் லக்கிம்பூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு இப்போது பல முனை போட்டி நிலவுகிறது. லக்கிம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் யோகேஷ் வர்மா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சமாஜ்வாதியின் வர்மா மதுர், பகுஜன் சமாஜ் கட்சியின் மோகன் பாஜ்பாய் களமிறங்குகின்றனர். இவர்களைத் தவிரவும் காங்கிரஸ், மஜ்லீஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அங்குக் களத்தில் உள்ளன.

 வாக்களித்தார் அஜய் மிஸ்ரா

வாக்களித்தார் அஜய் மிஸ்ரா

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு லக்கிம்பூர் தொகுதியில் தான் வாக்கு உள்ளது. இதனிடையே இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அஜய் மிஸ்ரா வாக்களித்தார். தேர்தல் காரணமாக லக்கிம்பூர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 104 கம்பெனி சிஏபிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி சஞ்சீவ் சுமன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+