சீரான வளர்ச்சி.. வேகமாக இலக்கை எட்டும் உத்தரப் பிரதேசம்! அசத்தி காட்டிய அம்பேத்கர் நகர் மாவட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சிறந்த மாவட்டங்களின் பட்டியலில் அம்பேத்கர் நகர் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. மாநிலத்தின் ஒவ்வொரு நகரமும் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அனைத்து அரசு திட்டங்களிலும் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளை மதிப்பீடு செய்ய முதல்வர் கண்காணிப்பு டாஷ்போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி பணிகள் எவ்வளவு வேகத்தில் நடைபெறுகிறது என்பது குறித்து அளவீடு செய்ய முடியும். மட்டுமல்லாது மாவட்டங்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் அதன் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும். இந்த முயற்சி தற்போது கைகொடுத்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சில இலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, வழக்கு பதிவு செய்யப்படுகிறது எனில் எவ்வளவு சீக்கிரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்? விபத்து நடக்கிறது எனில் மருத்துவ சேவை எந்த அளவுக்கு வேகமாக கிடைக்கிறது? என்பது போன்ற விஷயங்கள் கவனிக்கப்பட்டு அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் அம்பேத்கர் நகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த மாவட்டம் 50க்கும் மேற்பட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
மேலும், "உத்தரப் பிரதேசத்தை தரம் உயர்த்த புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. கடந்த 1947 தொடங்கி 2014ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் 3 விமான நிலையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் ஒன்பது விமான நிலையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 18 ஆக உயரும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications