Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே அசிங்கமா போச்சு குமாரு.. மணமேடையில் திடீரென அந்த கேள்வி கேட்ட மணப்பெண்.. சோகத்தில் மாப்பிள்ளை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மாப்பிள்ளைக்கு 2ம் வாய்ப்பாடு கூட சொல்ல தெரியாததால் கோபம் அடைந்த இளம் பெண் திருமணத்தை நிறுத்தி உள்ளார்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பெரியவர்கள் சொல்வார்கள். திருமணம் குறித்து பெண்ணோ, ஆணோ சரியான முடிவு எடுக்காவிட்டால், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்டாலும் நரகத்தில் தான் வாழ வேண்டியதிருக்கும். இருவருக்கும் இடையே சரியான புரிதல்கள் திருமணத்திற்கு முன்பே ஏற்படாவிட்டால் நிச்சயம் அந்த திருமணம் கசப்பாகவே இருக்கும்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண், தனக்கு கணவராக வரப்போகிறரின் அறிவு திறனை சோதித்துள்ளார். அவருக்கு 2ம் வாய்ப்பாடு கூட தெரியாததை கண்டு அதிர்ச்சி அடைந்து திருமணத்தையே தடுத்து நிறுத்தி உள்ளார். பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானம் கூறியும் ஏற்க மறுத்துவிட்டார்.

உபியில் சம்பவம்

உபியில் சம்பவம்

உத்தரப்பிரதேசத்தின் மஹோபா பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர் திருமண நாளில் வீடே களை கட்டியிருந்தது. இரு வீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

கல்வி தகுதி சோதனை

கல்வி தகுதி சோதனை

இந்நிலையில் கொஞ்சம் நேரத்தில் திருமணம் நடைபெற போகிறது என்கிற நிலையில், மணப்பெண் மீனா, தனக்கு கணவனாக வரப்போகிறவரின் கல்வி தகுதியை சோதிக்க விரும்பி உள்ளார். திருமணத்திற்கு இருவீட்டார்களும் திரண்டு இருந்தனர்.

விழித்த மாப்பிள்ளை

விழித்த மாப்பிள்ளை

மாப்பிள்ளையும், பெண்ணும் மணக்கோலத்தில் இருந்தனர். இந்நிலையில் மாப்பிள்ளையிடம் 2வது வாய்ப்பாடு கூறும்படி மணப்பெண் கேட்டுள்ளார். ஆனால் மாப்பிள்ளைக்கு வாய்ப்பாடு தெரியவில்லை. மணப்பெண்ணிடம் திருத்திருவென விழித்துள்ளார். அப்போது தான் அவர் பள்ளிக்கு சென்றதில்லை என்பது மணப்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

மாப்பிள்ளை ஏமாற்றம்

மாப்பிள்ளை ஏமாற்றம்

இதனால் ஏமாற்றமடைந்த மணப்பெண், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தும்படி தெரிவித்துள்ளார். மணப்பெண்ணின் குடும்பத்தினர் இளம் பெண்ணை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றனர். ஆனால் அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக மாப்பிள்ளை ஏமாற்றம் அடைந்தார். திருமணத்திற்கு வந்த உறவினர்களும், திருமணத்தை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அறிவுத்திறன் கேள்வி

அறிவுத்திறன் கேள்வி

திருமணத்திற்கு முன்பு சாம்பாத்தியம், சொத்து, படிப்பு, அழகு பார்க்கும் பெண்கள், இனி நிச்சயம் செய்யும் முன்பே அறிவு திறனையும் சோதித்து பார்க்க தொடங்கினால் பல பேருக்கு திருமணம் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+