மாஞ்சோலையை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க தடை கோரி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு
மதுரை: மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை மாஞ்சோலை தொடர்பான பிரதான வழக்குகளோடு இணைத்து விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
மாஞ்சோலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், வனத்துறை மாஞ்சோலை பகுதி முழுவதையும் கையகப்படுத்தி வனமாகவே பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து மதுரையைச் சேர்ந்த வைகைராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்,

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், " தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, 2 ஆயிரத்து 250 வகை தாவரங்கள், 46 மீன் வகைகள், 19 வகை பாலூட்டிகள், 337 வகை பறவைகளுக்கு இருப்பிடமான இந்த களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இந்த பகுதியில் தான் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்துள்ளது.
மாஞ்சோலை டீ எஸ்டேட் பகுதியில் ஒரே பயிர் பயிரிடப்படுவதால், இப்பகுதியில் சூழல்கள் முழுமையாக மாறுபடுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் வேதி உரங்களால் இயற்கைச் சூழல்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் முன்கூட்டியே தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது. மாஞ்சோலை பகுதி மக்களின் நலன் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றம் அப்பகுதி மக்களை வெளியேற்ற தடை விதித்துள்ளது.
ஆகவே, மாஞ்சோலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும், வனத்துறை மாஞ்சோலை பகுதி முழுவதையும் கையகப்படுத்தி வனமாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் வைகைராஜன் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி விஜயகுமார் அமர்வு, மாஞ்சோலை தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
முன்னதாக மாஞ்சோலை தொடர்பான பிரதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கியமான யோசனை ஒன்றை தெரிவித்திருந்தது.மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான் டீ ஏற்று நடத்தி, தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி இருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மனிதத் தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் ஜூலை 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications