தகாத உறவை கண்டித்த கணவர்.. காதலனுடன் சேர்ந்து போட்டுத் தள்ளிய ஜோதிகா.. மதுரையை அதிரவைத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே அலங்காநல்லூரில் தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்த கணவரை நண்பருடன் சேர்ந்து மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட நண்பர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கரட்டு குடியிருப்பு என்ற பகுதி உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்வர் பழனி மகன் சரவணன் (30). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் சுமைதூக்கும் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவருடைய மனைவி ஜோதிகா(23). இவா் கட்டட வேலை பாா்த்து வந்தாா்.

madurai crime


ஜோதிகா வசிக்கும் பகுதியில் கட்டட வேலை நடைபெற்று வந்துள்ளது. அங்கு ஜோதிகா வேலை செய்து வந்துள்ளார். வலசை பகுதியைச் சோ்ந்த உடப்பன் (21) என்பவரும் அங்கு கட்டட வேலைக்காக வந்துள்ளார். அப்போது, ஜோதிகாவுக்கும், உடப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.

இவர்கள் இருவரின் தகாத உறவு குறித்தும் சரவணனுக்கு தெரியவந்ததையடுக்கு, ஜோதிகாவை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜோதிகா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உடப்பனுடன் சென்றுவிட்டாா். இதுதொடா்பாக சரவணன் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில், உடப்பன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரையும் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னா், உடப்பனிடம் இருந்து பிரித்து ஜோதிகாவை மீண்டும் கணவா் சரவணனுடன் சோ்த்து வைத்தனா். கடந்த ஒரு வாரமாக ஜோதிகா கணவருடன் சோ்ந்து வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், ஜோதிகா உடப்பனுடன் செல்போன் மூலம் பேசத் தொடங்கியுள்ளது. சரவணன் அதனைக் கண்டித்துள்ளார். கணவர் தொடர்ந்து உன்னுடன் பேசுவதற்கு சண்டை போட்டு வருவதாக ஜோதிகா உடப்பனிடம் கூறியுள்ளார். தங்களது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த சரவணனைக் கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனா்.

பின்னர், உடப்பன், தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சரவணன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டுக்கு வெளியே நின்றிருந்த ஜோதிகா அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சரவணனை ஜோதிகா உள்பட மூவரும் சோ்ந்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

பின்னா், சரவணனின் உடலை துணியால் கட்டி வெளியே கொண்டு செல்ல முயன்றுள்ளனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால் உடலை அங்கேயே விட்டு விட்டு உடப்பனும், 17 வயது சிறுவனும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

நாய்களின் தொடர்ந்து சப்தம் போட்டுக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த துணிக்குள் சரவணன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக அலங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர்.

சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜோதிகாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜோதிகா, உடப்பன் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜோதிகா, உடப்பன், அவருடன் இருந்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+