இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கோ அங்கே தான்.. நடிகர் வையாபுரி சொன்ன விஷயம்
மதுரை: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் வையாபுரி இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அவர்களுக்காக தான் பிரச்சாரம் செய்வேன் என்று கூறினார். மேலும் கரூர் கூட்ட நெரிசல் குறித்தும் நடிகர் வையாபுரி கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் வையாபுரி இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டங்கள் வந்ததற்கு காரணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு தரப்பிலும் ஒரு விஷயம் இருக்கிறது. நடிகர் என்றால் அவரைப் பார்ப்பதற்கு கூட்டங்கள் வரத்தான் செய்யும். ஆனால் எதிர்பாராமல் இது நடந்துவிட்டது. அவரும் கூட அதிக முறை இதை சொல்லியிருக்கார், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது, கர்ப்பிணிகள் வரக்கூடாது என பலமுறை கூறியிருக்கிறார்.
அதையும் மீறி ஆசையில் பார்க்க வருகிறார்கள். நடந்திருக்கக் கூடாது. எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. இதற்கு நிறைய பேர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். நானும் என்னுடைய சார்பில் வருத்தம்தான் தெரிவிக்க முடியுமே தவிர, இதற்காக நான் ஏதும் விளக்கம் தர முடியாது. அந்த அளவுக்கு எனக்கு தகுதியும் கிடையாது.
பொதுவாகவே யாருமே யாரையுமே கார்னர் பண்ண முடியாது. ஏனென்றால் அவங்க அவங்களுக்கு என ஒரு வட்டம் இருக்கும். அவங்களுக்கு என ரசிகர் இருக்காங்க.. அவங்களுக்கு என ஒரு கூட்டம் இருக்கு. நிறைய படங்கள் நடித்து இருக்கிறேன். நல்ல நண்பர். மனம் விட்டு பேசியிருக்கோம். இவர் மட்டும்.. அவர் மட்டும் என்று எல்லாம் கிடையாது.. இருவருமே என்னுடைய இரு கண்கள் மாதிரி தான். ஒன்று ஏகே.. ஒன்று விஜய்.. இருவருடனும் கூட நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன்.
இதுவரைக்கும் கமல் சாரும் நானும் நிறைய படங்கள் பண்ணியிருக்கோம். என்னையும் பலமுறை பாராட்டியிருக்கார். ஆனால் ஒருமுறை கூட அவர் கட்சி ஆரம்பித்தபோது கூட என் கட்சிக்கு வா என்று அழைத்தது கிடையாது. கேப்டனுடனும் நான் நிறைய படம் பண்ணியிருக்கிறேன். அவரும் அப்படித்தான், வா வையாபுரி பிரச்சாரத்துக்கு வாங்க என கூப்பிட்டது கிடையாது. யாரும் யாரையும் கூப்பிட மாட்டாங்க.. விரும்பி சென்றால் உண்டு.
ஜெயலலிதா என் திருமணத்துக்கு இரண்டு குத்துவிளக்கு கொடுத்தாங்க.. அது இப்போது வரைக்கும் என் வீட்டில் வெளிச்சம் வீசி வருகிறது. நான் அன்னைக்கு சொன்ன ஒரு விஷயம்தான்.. இப்போதும் சொல்கிறேன்.. இரட்டை இலை எங்கே இருக்கோ அவர்களுக்குத்தான் ஓட்டு கேட்டு போவேன்.. இதுவரை எங்கேயும் மாறியது இல்லை.. இனிமேலும் மாறப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி











Click it and Unblock the Notifications