Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்ற பொன்குமார் எடுக்கும் சூப்பர் முயற்சி.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: அலங்காநல்லூரைச் சேர்ந்த இளைஞர் பொன் குமார், தமிழகத்தில் நாளுக்கு நாள் அழிந்து வரும் நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்றும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வெளிநாட்டு மாடுகளை விட நாட்டு மாடுகளின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் காளை உரிமையாளர்களுக்கு காங்கேயம் பசு மாடு மற்றும் கன்றை பரிசாக வழங்கி வருகிறார். இம்முறை போட்டியில் வென்றவருக்கும் இதேபோல் பரிசு வழங்க உள்ளார். பொன் குமாரின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பெருமளவில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாட்டு மாட்டு இனங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் மக்களும் அதிக பால் உற்பத்தி செய்வதற்காக வெளிநாட்டு மாடுகளை வளர்ப்பதிலே தான் ஆர்வம் காட்டுகின்றனர். அழிந்து வரும் நாட்டுமாட்டு இனங்களை பாதுகாக்கும் வகையில் அலங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த பொன் குமார் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

jallikattu pongal 2025 bull

அதில் குறிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பாலமேட்டில் நடைபெறும் போது அதில் வெற்றி பெறும் காளை உரிமையாளர்களுக்கு காங்கேயம் பசு மாடு மற்றும் அதன் கன்று குட்டியையும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட காளையின் உரிமையாளருக்கு காங்கேயம் பசு மாடு வழங்க உள்ளார். பொன்குமாரின் இந்த செயலுக்கு அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+