சபாஷ் மதுரை மாநகராட்சி..! ரூ.100 விலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகம்
மதுரை: கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மருந்து பெட்டகத்தை மதுரை மாநகராட்சி நிர்வாகம் ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறது.
ரூ.250 மதிப்புள்ள இந்த மருந்து பெட்டகம் ரூ.100-க்கு கிடைப்பதால் மதுரை மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு இதனை வாங்கி வருகின்றனர்.
மேலும், வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை பார்சல் அனுப்புகின்றனர்.

மதுரை மக்கள்
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கொரோனா வேகமாக பரவும் ஊர்களில் மதுரையும் ஒன்று. இதனால் தான் மதுரை மாவட்டத்தில் கூடுதல் கெடுபிடிகள் காட்டப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் வைக்கும் முயற்சியாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மருந்து பெட்டகத்தை ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.100க்கு கொடுத்து வருகிறது. இந்தப் பெட்டகத்தை வாங்கிச்செல்ல மதுரை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மருந்துப் பொருள்
மாநகராட்சி வழங்கும் இந்த பெட்டகத்தில் கபசுரக் குடிநீர் பொடி 50 கிராம், தாளிசாதி சூரணம், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆடாதொடை மனப்பாகு, ஆர்சனிக் ஆல்பம் 30 சி உள்ளிட்ட மருந்துகள் உள்ளன. இதனை தனித்தனியாக வாங்கினால் அதற்கு ரூ.250 வரை செலவாகும் நிலையில் ரூ.100-க்கு கிடைப்பதால் இந்த மருந்து பெட்டகம் விரைவில் விற்றுத்தீர்ந்து விடுகிறது. இதனால் மருந்துப் பொருட்களை மேலும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பகுதிகள்
மதுரை மாநகராட்சி முன்னெடுத்துள்ள இந்த சீரிய முயற்சியை அனைத்து பகுதிகளிலும் அரசு நடைமுறைப்படுத்தினால் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். சித்த மருந்து உற்பத்திக்கு தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி ஊக்குவித்தால் எதிர்க்காலத்தில் மூலிகை மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைக்கக்கூடும். இதனிடையே மதுரை மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை மற்ற ஊர்களில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

இலவசமாக
மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து பெட்டகத்தை விநியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், தன்னார்வலர்கள் மூலம் ஏழை மக்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இதை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications