Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை மக்களுக்கு மாஸ் செய்தி! பல ஆண்டு எதிர்பார்ப்பு.. ஒரு வழியாக நடக்குது! வேற லெவல் தரமான மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த முக்கிய விஷயம் விரைவில் நடக்கப் போகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கும் மிகப் பெரியளவில் பயனடைய உள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக மதுரை இருக்கிறது. கோயில்கள் சூழ்ந்த அழகிய நகரமான மதுரையில் ஐடி கம்பெனிகளும் கூட கணிசமாக இருக்கிறது.

 Madurai Mattuthavani bus stand is getting ready for revamping

இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் மக்கள் மதுரைக்கு வருகிறார்கள். இருப்பினும், மதுரையில் டிராபிக் மோசமாகவே இருக்கிறது. இதைச் சரி செய்ய அங்கு மெட்ரோவை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அட்டகாசமான மாற்றம்: மதுரை மக்களுக்கு மேலும் அட்டகாசமான மாற்றம் காத்திருக்கிறது. மதுரையில் முக்கிய பேருந்து நிலையமாக இருப்பது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் பல வசதிகள் இல்லை. இப்போது பயணிகளின் எண்ணிக்கையும் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப பேருந்து நிலையத்தை அப்டேட் செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே மதுரை மக்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்த விஷயம் இப்போது நடக்க உள்ளது. அங்குள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் என இரண்டையும் சீரமைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக ரூ.1.8 கோடியில் மாநகராட்சி டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் சீரமைப்புப் பணிகள் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

 Madurai Mattuthavani bus stand is getting ready for revamping

பஸ் ஸ்டாண்ட்: மாட்டுத்தாவணி மற்றும் அதன் அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையங்களில் இருந்து தினசரி பல லட்சம் மக்கள் அண்டை மாவட்டங்களுக்கும் அவ்வளவு ஏன் அண்டை மாநிலங்களுக்கும் செல்கிறார்கள். இந்த நேரத்தில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்வது அவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாகவே இருக்கும்.

பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளுக்கு ஏற்ப மொத்தம் 8 பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ தண்ணீர் வசதி, தாய்ப்பால் அறைகள் தவிர எனத் தேவையான அத்தனை வசதிகளும் இருக்கும் வகையில் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் மறுசீரமைக்கப்பட உள்ளது.

மோசமான நிலை: மதுரையில் முக்கிய மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருந்தும், பழமை வாய்ந்த பஸ் ஸ்டாண்ட்டில் போதுமான வசதிகள் இல்லை.. இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சூழலே இருக்கிறது. இங்குள்ள பாழடைந்த கான்கிரீட் மேற்கூரையின் பகுதிகள் பலமுறை இடிந்து கீழே விழுந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இதுபோன்ற சம்பவங்கள் அங்குத் தொடர்ந்து கொண்டே இருந்தன. இதில் பல பயணிகளும் காயமடைந்துள்ளனர்.

 Madurai Mattuthavani bus stand is getting ready for revamping

அதேபோல இங்கே பேருந்து நிலையத்தில் இருக்கும் தாய்ப்பால் கொடுக்கும் அறை கூட மிக மோசமாகவே இருந்துள்ளது.. சுத்தமாக எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் இருக்கிறது. இங்குள்ள சுகாதாரமற்ற சூழல் காரணமாக, தாய்ப்பால் கொடுக்கும் அறையைக் கூட மக்களால் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்தச் சூழலில் இந்த பேருந்து நிலையம் மறுசீரமைக்கப்படுவது அனைவருக்கும் மிகப் பெரிய அளவில் உதவும் என்றே இப்பகுதியில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அடிக்கடி இடித்து விழும் கூரையின் பலவீனமான பகுதிகள் அகற்றப்பட்டு, அது புனரமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.. மேலும் இங்குப் பொதுமக்கள் நல்ல தண்ணீர் குடிக்கும் வகையில் தண்ணீர் குழாய்கள் மேம்படுத்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார ஒயர்களையும் சரி செய்யவும் திட்டமிட்டுள்ளன

இப்படி ஒட்டுமொத்தமாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையமே வேற லெவலில் மாறப் போகிறது. இது மதுரை வாசிகளுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையமாக இருக்கும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மறுசீரமைக்கப்படுவது மக்களுக்கு மதுரை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+