ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டு ஒதுங்கணும்! இணைப்புக்கு வாய்ப்பே இல்லை! ராஜன் செல்லப்பா ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசியலை விட்டே ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆவேசம் காட்டியிருக்கிறார்.

Recommended Video

    ADMKவை OPS மறந்துவிட வேண்டியதுதான் - ஆர்.கே.ராதா கிருஷ்ணன் | Oneindia Tamil

    எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள படைபலத்தை பார்த்து பயந்து தான் இணைப்புக்கு வருமாறு ஓபிஎஸ் அழைப்பு விடுப்பதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

    மேலும் திமுகவை எதிர்க்கும் மன தைரியமோ, துணிச்சலோ ஒ.பன்னீர்செல்வத்திடம் துளியும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

    ராஜன் செல்லப்பா

    ராஜன் செல்லப்பா

    எடப்பாடி பழனிசாமியை அன்புச் சகோதரர் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அதிமுக சட்டமனற உறுப்பினரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான ராஜன் செல்லப்பா மிக ஆவேசமாக ஓபிஎஸ் பற்றி விமர்சித்திருக்கிறார். கட்சியின் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவராக இருந்திருந்தால் ஜானகி அம்மா விட்டுக் கொடுத்ததை போல் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்றும் அவர் அவ்வாறு செய்திருந்தால் தியாகி என்று தாங்களே அவரை கொண்டாடி இருப்போம் எனவும் தெரிவித்தார்.

    ஒதுங்க வேண்டும்

    ஒதுங்க வேண்டும்

    ஓ.பன்னீர்செல்வம் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும் என வலியுறுத்திய ராஜன் செல்லப்பா, எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள படைபலத்தை பார்த்து பயந்து தான் இணைந்து செயல்வட வருமாறு அழைப்பதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது திமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கு சமம் எனக் கூறினார் ராஜன் செல்லப்பா.ஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி எனவும் புகழாரம் சூடினார்.

    தைரியம் இல்லை

    தைரியம் இல்லை

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு தலைவர் ஆகும் தகுதியில்லை என்று கூறிய ராஜன் செல்லப்பா, எடப்பாடி பழனிசாமியை தாங்கள் ஆதரிப்பதற்கான காரணங்களை அடுக்கினார். 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியை நிலை நிறுத்தியது, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டியது என கட்சிக்காகவும் தொண்டர்களுக்காகவும் உழைத்தவர் எடப்பாடி எனப் பேசினார் ராஜன் செல்லப்பா. மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வத்திடம் திமுகவை எதிர்க்கும் மன தைரியம் இல்லை என சாடினார்.

     வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    இதனால் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை தாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்பே இல்லை எனவும் மிகவும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் ராஜன் செல்லப்பா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+