மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் மோடியின் சகோதரர் வழிபாடு.. உடன் வந்த தம்பிதுரை
Recommended Video

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை கோவில் வந்தடைந்தார். அவருடன் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உயரதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.

கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பங்கஜ் மோடிக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மீனாட்சி மற்றும் சொக்கநாதரை சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் பொற்றாமரை குளத்தருகில் சிறிது நேரம் அமர்ந்து உடன் வந்தவுடன் உரையாடினார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
பிரதமரின் தம்பி வருகையையொட்டி மதுரை காவல்துறையினர் மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சிறப்பு பாதுகாப்புகளை மேற்கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications