“ரத்தக் கையெழுத்து”.. எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கையெழுத்து இயக்கம் தொடங்கிய ஆர்.பி. உதயகுமார்
மதுரை: பசும்பொனில் நடக்கும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி. உதயகுமார் ரத்தத்தில் கைரேகை பதித்தார். அவரைத் தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது ரத்தத்தில் கைரேகை பதித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வரும் அக்டோபர் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

பசும்பொனில் நடக்கும் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி. உதயகுமார் ரத்தத்தில் கைரேகை பதித்தார். அவரைத் தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது ரத்தத்தில் கைரேகை பதித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி வறட்சியில் உள்ளது. 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும்.” என்றார்.
மேலும் பேசிய அவர், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லிவிட்டார். டி.டி.வி தினகரனை பற்றி பேசத் தேவையில்லை. மீடியா வெளிச்சம் இல்லை என்றால், தமிழக மக்கள் மறந்து விடுவார்கள். டி.டி.வி.தினகரன் முதலில் மக்கள் பணி செய்யட்டும். டெல்டா மாவட்டங்களில் நெல் விதைகள் வீணாகப் போகிறது. அதைப் பற்றி எல்லாம் பேசாமல், போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது. முதலில் மக்கள் பணியை செய்ய சொல்லுங்கள். அதற்கு பிறகு மக்கள் தலைவர்களை பற்றி பேச சொல்லுங்கள்.
மாத்திரை எக்ஸ்பயரி டேட் முடிவதற்கு முன்பு சாப்பிட்டால் குணமாகும். அதையே காலம் தாழ்ந்து பின்பு சாப்பிட்டால் விஷம் ஆகிவிடும். எனவே எக்ஸ்பயரி டேட் முடிந்தவரைப் பற்றி பேச தேவையில்லை. டெல்டா மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழுகாது. அந்த அளவிற்கு விவசாயிகள் கோபத்தில் உள்ளனர். எல்லா நெல்லும் நாத்தாக மாறிவிட்டது. இதனை மறைத்து மாற்றும் முயற்சியில் உதயநிதி செயல்படுகிறார்" எனத் தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications