சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு.. போலீசார் 9 பேரும் குற்றவாளிகள்.. நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. போலீசார் தான், தந்தை மகன் இருவரையும் அடித்து கொலை செய்துள்ளதாகவும், தந்தை மகன் இருவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் இன்றூ வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரியான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் போலீசார் தாக்கியதில் கடுமையாக காயமடைந்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடை திறக்கும் நேரம் தொடர்பான விவகாரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் அங்கு தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை ஆரம்பத்தில் மாநில போலீசார் விசாரித்தாலும், பின்னர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் அடிப்படையில், அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 9 போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வழக்கின் அனைத்து தரப்பினரின் வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதி முத்துக்குமார் இந்த வழக்கை இன்று (திங்கட்கிழமை) தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தார். இன்று நீதிபதி முத்துக்குமார் தீர்ப்பு அளித்தார். அப்போது காவலர்கள் தாக்கியதால் தான் தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். போலீசார் அவர்களை அடித்து கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம், காவல் துறையின் செயல்பாடு மற்றும் மனித உரிமைகள் குறித்து நாடு முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. சமூக வலைதளங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த வழக்கில் விரைவான நீதி கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் இந்த வழக்கு தேசிய அளவில் கவனம் பெற்ற முக்கிய வழக்காக மாறியது.
2020ஆம் ஆண்டு நடைபெற்ற தந்தை-மகன் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பின் கைதான போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதால், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications