மதுரை ரயில் நிலையத்தில் கிழிந்த நிலையில் பறக்கும் தேசிய கொடி.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை: மதுரை ரயில் நிலையத்தின் பிரதான வாயிலின் முன்பாக பெரிய கம்பத்தில் பெரிய அளவிலான தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும். அந்த தேசிய கொடி தற்பொழுது கிழிந்த நிலையில் உள்ளது
Recommended Video
தேசிய கொடியை மாற்ற ரயில்வே நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை மாநகரத்தின் முக்கியமான சந்திப்பு பெரியார் நிலையம். இங்கு தான் மீனாட்சி அம்மன் கோவில், கடை வீதிகள், ரயில் நிலையம் என அனைத்தும் ஒரே இடத்தில ஒருங்கே அமைய பெற்ற இடம் ஆகும்.
உணவகங்கள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள், அழகு நிலையங்களுக்கு புதிய வழிகாட்டுதல்.. சென்னை மாநகராட்சி
மதுரை ரயில் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா பரவலை தடுக்க ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் பிரதான வாயிலின் முன்பாக பெரிய கம்பத்தில் பெரிய அளவிலான தேசிய கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருக்கும். அந்த தேசிய கொடி தற்பொழுது கிழிந்த நிலையில் உள்ளது
தேசிய கொடியை மாற்ற ரயில்வே நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.