நடப்பதை பாருங்க.. கற்பூரத்தைக் கொளுத்தி.. சாபம் விடும் பாணியில் ஆத்திரத்தோடு பேசிய ராம ரவிக்குமார்!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையேற போலீசார் அனுமதி மறுத்ததால், மனுதாரரான இந்து மக்கள் கட்சியினர் கலைந்து செல்லத் தொடங்கினர். மலைக்குச் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டு விழுந்து வணங்கி கலைந்து சென்றனர்.
நேற்று போலீசார் இவரை அனுமதிக்க வில்லை என்றதும், நடப்பதை பாருங்க.. முருகன் பார்த்துக்கொள்வான் இவர்களை என்று கூறி கற்பூரத்தைக் கொளுத்தி.. சாபம் விடும் பாணியில் இந்து முன்னணி ராம ரவிக்குமார் ஆத்திரத்தோடு பேசினார்.
சூடத்தை ஏற்றிவிட்டு பேசிய ராம ரவிக்குமார், இன்று எங்களுக்கு அனுமதி மறுத்தவர்கள்.. இங்கே அனுமதி தர முடியாது என்று சொன்னவர்கள்.. எங்களுக்கு சல்யூட் போட்டு அழைத்து செல்வார்கள். அதை நான் செய்து காட்டுவேன். அதுவரை நான் விட மாட்டேன். நான் ஒரு இந்து. நான் விட மாட்டேன். இல்லையென்றால் நான் வாழ்வதே வேஸ்ட். முருகா.. நாளைக்கு எங்களுக்கு தீர்வை கொடு.. முருகா.. முருகா.. அரோகரா.. அரோகரா
சூடத்தை ஏற்றிவிட்டு பேசிய ராம ரவிக்குமார்
கோர்ட் தீர்ப்பை மீறி செயல்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் தீர்ப்பின்படியே விளக்கு ஏற்ற கேட்டோம். ஆனால் அனுமதிக்காமல் தவிர்க்கிறார்கள். என்ன செயல் இது. எங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட செயல். எங்களையும், மத்திய பாதுகாப்பு படையினரையும் கைது செய்வேன் என்று சொல்கிறார்கள். இது திட்டமிட்டு நடக்கும் செயல்,

ஆனா இந்த மலையில மட்டும் தீபம் ஏற்றலனா என்ன நடக்கும்னே தெரியாது சொல்லிட்டேன். திட்டமிட்டு செய்லபடும் இந்த அரசாங்கத்தின் செயலை கண்டிக்கிறேன். நான் வயிறு எரிந்து சொல்கிறேன். நான் சத்தியமாக சொல்கிறேன். என் குலசாமி சார்பாக சொல்கிறேன். தீபம் மட்டும் ஏறவில்லை என்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது.
மேல்முறையீடு செய்துள்ளதாக கூறி எங்களை தடுக்கிறார்கள். வழக்கில் எந்த தீர்ப்பும் வரவில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவிற்கு தடை இல்லை. ஆனால் தீர்ப்பை மீறி எங்களை தடுக்கின்றனர். இது என்ன நியாயம்? என்று சூடத்தை ஏற்றிவிட்டு ராம ரவிக்குமார் கோபமாக பேசினார்.
திருப்பரங்குன்றம் - என்ன நடந்தது?
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம்












Click it and Unblock the Notifications