வேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறை அறிவிப்பு
மதுரை: வேலம்மாள் கல்வி நிறுவனம் 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தனது செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்தவர் எம்.வி. முத்துராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் வேலம்மாள் கல்வி குழுமம்.இவர், கடந்த 1986-ம் ஆண்டு அவருடைய தாயார் வேலம்மாள் பெயரில் சென்னை முகப்பேரில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை தொடங்கினார்.
பின்னர் திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வேலம்மாள் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு அங்கும் செயல்பட்டு வருகின்றன.

ஒரு லட்சம் மாணவர்கள்
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றி வருவதாக கூறப்பபடுகிறது. இந்த நிறுவனத்தை எம்.வி. முத்துராமலிங்கத்தின் மகன்கள் எம்.வி.வேல்முருகன், எம்.வி.எம்.வேல்மோகன், எம்.வி.எம்.சசிகுமார் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

அதிரடி ரெய்டு
வேலம்மாள் கல்வி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 250 வருமானவரித்துறை அதிகாரிகள், 50 குழுக்களாக பிரிந்து, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், முகப்பேரில் உள்ள நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

சோதனை நிறைவு
சென்னை, மதுரை, தேனி, கரூர், திருவள்ளூர் உள்பட 64 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்று நிறைவு பெற்றது. பள்ளி நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்கள், தஸ்தாவேஜூகள் கிடைத்து உள்ளன. இந்த சோதனையில் அந்நிறுவனம் 532 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை
2 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்ட தகவல்கள்தான் என்றும் முழு விசாரணைக்கு பிறகே இறுதி நிலவரம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கல்வி நிறுவனமான 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித்துறை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications