குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதில் சானிடைசர்.. மகாராஷ்டிராவில் பெரும் குழப்பம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாடு முழுதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
வழக்கமாக இந்தியாவில் ஜனவரி மாதமே போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணிகள் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா தடுப்பூசி பணிகள் காரணமாகப் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

போலியோ முகாம்
நாடு முழுவதும் உள்ள ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாகப் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கொரோனா சொட்டு மருந்து அளிக்கும் முகாம்களில் சரியான முறையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. சொட்டு மருந்து கொடுக்கும் பணியிலிருந்த சுகாதார ஊழியர்களின் வெப்ப நிலையும் சோதிக்கப்பட்டன.

சொட்டு மருந்திற்குப் பதில் சானிடைசர்
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மல் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு போலியோ முகாமில் சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 12 குழந்தைகளுக்கு இவ்வாறு சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முகாமில் வைக்கப்பட்டிருந்த சானிடைசர்கள் சொட்டு மருந்துடன் மாறிவிட்டதால் இந்த தவறு ஏற்பட்டுள்ளது.

மூன்று பேர் சஸ்பெண்ட்
இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐந்து வயதிற்கும் குறைவான 12 குழந்தைகளுக்குச் சொட்டு மருந்திற்குப் பதிலாக சானிடைசர் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இப்போது வரை அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மருத்துவர், சுகாதார ஊழியர், ஆஷா ஊழியர் என மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் போலியோ முகாம்
கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியா போலியோ இல்லாத ஒரு நாடாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் கடைசியா 2011ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி போலியோ கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் போலியோ இருப்பதால், சொட்டு மருந்து அளிக்கும் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications