வரலாம்..அதுக்குன்ணு இப்படியா.. எதிர்க்கட்சியினரின் அதிகப்படியான வருகையால் பாஜக விசுவாசிகள் அப்செட்
மும்பை: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சியில் இருந்து 12க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எதிர்க்கட்சியினர் இப்படி அதிகப்படியான அளவு பாஜகவில் இணைவதை கண்டு அந்த கட்சியின் தீவிர விசுவாசிகள் அப்செட்டில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இதன் காரணமாக தேசிய வாத காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

பாஜகவினர் அதிருப்தி
இப்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 12க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்துள்ளனர். அதிகப்படியான தலைவர்களின் வருகையால் மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எதிர் எதிர் அரசியல்
சட்டசபை தேர்தலில் சீட் கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் கலக்கத்தில் உள்ளனார்கள் அந்த மாநில பாஜக தலைவர்கள். இப்படி ஒரேடியாக எல்லாரும் வந்து சேர்ந்தால் யாருக்கு சீட் கிடைக்கும் என்று கலக்கத்தில் உள்ளனர். இவ்வளவு காலம் எதிர்எதிராக பேசி அரசியல் செய்தவர்கள் இப்போது ஒரே அணியில் வருவதால், இனி விமர்சனங்களும் செய்ய முடியாது என்று கவலை அடைந்துள்ளனர்.

பாஜக தலைவர் எதிர்ப்பு
கடைசியாக அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த என்சிபி கட்சி மாவட்ட தலைவர் மதுகர் பிச்சாத் உள்பட இரண்டுபேர் பாஜகவில் இணைந்தனர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த அசோக் பங்காரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பிச்சாத் கைதில் இருந்து தப்பிப்பதற்காக பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக வித்தியாசமான கட்சி. இங்கு திருடர்களுக்கும், வழிபறி கொள்ளையர்களுக்கும் இடமில்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் திலீப் சோபா
இது மடடுமல்ல சோலாபூர் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த பாஜகவின் ரவுத் என்பவர் என்சிபியில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் திலீப் சோபாலின் வருகையால் தங்களுக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமே என்று வருத்தத்தில் உள்ளார். இருந்த போதிலும் தான் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்துள்ளார்.

பாஜகவினர் அப்செட்
இதேபோல் நாசிக் பல்சோர் உள்பட பல்வேறு தொகுதிகளில் எதிர்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்ததால் அந்த கட்சி தலைவர்கள் சீட் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும் என வருத்ததில் உள்ளார்கள்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications