“என் உள்ளாடையை பார்க்க விரும்பினாரு..” இயக்குநர் மீது நடிகை பிரியங்கா சோப்ரா பரபர புகார் - யார் அது?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான பிரயங்கா சோப்ரா, இயக்குநர் ஒருவர் தன்னுடைய உள்ளாடையை பார்க்க விரும்பியது தர்ம சங்கடத்தை கொடுத்ததாக பேசி இருப்பது இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தில் நடித்த அவர், உலக அழகி பட்டத்தையும் வென்று இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது பல்வேறு திரைப்படங்கள், இணைய தொடர்களில் நடித்து வரும் அவர், தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார். அப்போது ஒரு இயக்குநர் தன்னுடைய உள்ளாடையை பார்க்க விரும்புவதாக தெரிவித்தது கடும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறி இருக்கிறார்.
அவர் பேசுகையில், "அது 2002 அல்லது 2003 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் ஒரு படத்தில் அண்டர்கவர் அதிகாரியாக நடித்தேன். அப்போது ஒரு ஆணை கவர வேண்டும். அண்டர்கவர் அதிகாரியாக பெண்கள் நடிக்கும்போதெல்லாம் இதைதானே செய்ய சொல்வார்கள்? நான் அந்த ஆணை கவரும்போது ஒரு ஆடையை அந்த நேரத்தில் அவிழ்க்க வேண்டும்.
ஆனால், நான் உள்ளாடையை லேசாக மறைத்துக்கொண்டேன். அப்போது படத்தின் இயக்குநர், 'நான் உங்கள் உள்ளாடையை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதற்காக ஒருவர் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கிறார்?' என்று கேட்டார். அவர் நேரடியாக என்னிடம் அதை சொல்லவில்லை. என் முன்பாகவே அங்கிருந்த ஒரு மேக்கப் கலைஞரிடம் அவ்வாறு சொன்னார்.
அது ஒரு மனிதாபிமானம் அற்ற தருணம். அப்போது நான் வெளியில் ஒன்றுமில்லை என்ற உணர்வை எனக்கு தந்தது. எனது கலை முக்கியமில்லை, நான் நடிப்பது முக்கியமில்லை. என்று தோன்றியது. 2 நாட்கள் கழித்து நான் அந்த படத்தில் இருந்தே வெளியேறிவிட்டேன். தினமும் அவரது முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை.

பாலிவுட்டில் சிலர் என்னை ஒரு மூலைக்கு தள்ளிய பிறகு நான் பாலிவுட்டில் இருந்தே சில நாட்கள் விலகி இருந்தேன். அங்கு நிலவிய அரசியல் எனக்கு சோர்வை தந்தது. எனக்கு அந்த விளையாட்டை ஆடத் தெரியாது. சிலர் என்னை நடிக்கவிடாமல் தடுத்தார்கள். இதுவரை இந்த தகவலை நான் சொல்லியது இல்லை. ஆனால், இப்போது சொல்கிறேன்." என்றார்.
அதே நேரம் பிரியங்கா சோப்ராவிடம் அவ்வாறு நடந்துகொண்ட இயக்குநர் யார்? எந்த படத்தில் இருந்து அவர் பாதியில் வெளியேறினார் என்ற தகவலை அவர் வெளிப்படுத்தவில்லை. பிரியங்கா சோப்ராவின் இந்த பேட்டி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ரசிகர்கள் பலரும் அந்த இயக்குநரின் பெயரை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications