மோடிக்கு ரூ.1064 மணி ஆர்டர் செய்த விவசாயி.. அசத்தல் காரணம்!
Recommended Video

மும்பை: மும்பையை சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயம் விற்ற பணத்தில் ரூ.1,064 ஐ பிரதமர் மோடிக்கு மணி ஆர்டர் செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நிஃப்தட் தெஹ்ஸில் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சாதே, இவர் தனது நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.

அங்கு, ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விலை கேட்கப்பட்டுள்ளது. இறுதியாக, ரூ.1.40-க்கு ஒரு கிலோ என்று 750 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்தார்.
வெங்காய விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட திரும்ப வராததால், விரக்தி அடைந்த விவசாயி சஞ்சய் சாதே, பிரதமர் மோடிக்கு ரூ.1.064 ஐ மணி ஆர்டர் செய்தார். இதில் கூடுதலாக தனக்கு ரூ.54 மணி ஆர்டருக்காக செலவானதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர், முன்னோடி விவசாயி என மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பின்னர், 2010 ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பாரக் ஒபாமா, இந்தியா வந்த போது, நான் அவருடன் இரண்டு நிமிடங்கள் உரையாடினேன், உள்ளூரில் விவசாயிகளுக்கு ரேடியோ மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன் என்று கூறினார்.
நான் எந்த அரசியல் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, ஆனால் விவசாயிகளின் துயரங்களை துடைக்க அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாமல் இருப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. இதனால், விவசாயத்தில் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பியதாக விவசாயி சஞ்சய் சாதே தெரிவித்தார்.
இந்தியா வெங்காயம் உற்பத்தியில் 50 சதவிகிதம் வடக்கு மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications