மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோட்சே இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் பரபர ட்வீட்

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் கோட்சே.. துஷார் காந்தி ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் பரபர ட்வீட்- வீடியோ

    மும்பை: நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன். அவன் ஒரு இந்துவும் கூட. இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக் கண்தான் கோட்சே என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் அருண் காந்தி பரபரப்பான டிவீட் போட்டுள்ளார்.

    மேலும் கமல்ஹாசனின் கூற்றுக்கு துஷார் அருண் காந்தி ஆதரவும் தெரிவித்துள்ளார். கமல் பேசியது சரியே என்றும் அவர் ஆமோதித்துள்ளார்.

    மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரர்களில் ஒருவரான ஸ்ரீகிருஷ்ணா குல்கர்னி, கமல்ஹாசன் கூற்றை மறுத்து அவருக்கு ஒரு கடிதம் அனுப்பிய நிலையில் இன்னொரு கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, கமல்ஹாசன் பேசியது சரியே என்று கூறியிருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. உண்மையில் துஷார் காந்தி படு ஆவேசமாக பல ட்வீட்டுகளைப் போட்டுள்ளார்.

    கமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு தகவல் கமல்ஹாசனுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளது- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு தகவல்

    வீர சாவர்க்கர்

    வீர சாவர்க்கர்

    கடந்த சில நாட்களாகவே அவர் கோட்சே குறித்தும், வீர சாவர்க்கர் குறித்தும் சரமாரியாக டிவீட் போட்ட வண்ணம் உள்ளார். எல்லாமே அனல் பறக்கிறது. வீர சாவார்க்கர் சுதந்திரப் போராட்ட வீரரே இல்லை என்றும் ஆவேசமாக கூறியுள்ளார் துஷார்.

    தீவிரவாதி

    கோட்சே குறித்து அவர் போட்டுள்ள ஒரு டிவீட்டில், நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி, கொலைகாரன், இந்து என்று பகிரங்கமாகவே சாடியுள்ளார் துஷார் காந்தி.

    விஷம்

    அடுத்த டிவீட்டில் நாதுராம் கோட்சே, இந்து தீவிரவாதத்தின் ஊற்றுக் கண். இங்கிருந்து கிளம்பிய விஷம்தான் இன்று வரை மாலேகான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் என்று பரவியது. டபோல்கர், பன்சாரே, கல்பர்கி, கெளரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்று குவித்தது என்று காட்டமாக கூறியுள்ளார்.

    ஆர்எஸ்எஸ்

    இன்னொரு டிவீட்டில், கோட்சே, ஆப்தே கும்பல்கள் காந்தியைக் கொல்வதற்கு முன்பு 5 முறை முயற்சித்து தோல்வி அடைந்தனர். காந்தியைக் கொல்வதற்காக புனேவிலிருந்து பிராமணர்கள், சவார்க்கர் சமூகத்தவர், இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். அனைத்துமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய திட்டமிட்ட தீவிரவாத சதிச் செயல் காந்தி படுகொலை என்பதை அறியலாம் என்று கூறியுள்ளார் துஷார் காந்தி.

    English summary
    Gandhi's great grand son Tushar Gandhi says "Nathuram Godse is a terrorist"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X