கொரோனா பரவல்... மும்பை முதலிடம்... ஒரே நாளில் 8938 பேர் பாதிப்பு
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்றே ஒரே நாளில் 1,26,789 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 685 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திர பிரதேசத்தில் லக்னோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், லக்னோ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 16 ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் தினமும் 6000 க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தடுப்பு மருந்துகள் அதிகம் தேவைப்படுவதால், கூடுதலாக மருந்துகளை அனுப்ப மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தடுப்பு மருந்து செலுத்தும் பணியை தீவிரப்படுத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் நேற்று மீண்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் 8938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையை தொடர்ந்து டெல்லியில் ஒரே நாளில் 7437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் டெல்லியில் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications