ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி போடும் ஷூ விலை ரூ.2 லட்சமாம்..!?
மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே அணிந்துள்ள ஷூ ரூ.2லட்சம் மதிப்புடையது என்றும் விலை உயர்ந்த ஆடைகளை வாங்க அவருக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது எனவும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கேள்விகளால் வெளுத்து வாங்கியுள்ளார்.
அரசு ஊழியம் பார்க்கும் ஒரு நேர்மையான அதிகாரியால் எப்படி இது போன்ற ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிக்க முடியும் என நவாப் மாலிக் வினவியுள்ளார்.

இதனிடையே நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டையும், விமர்சனத்தையும் உறுதியாக மறுத்துள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே, நவாப் மாலிக் அறிவற்றவர் என்றும் அதனால் தான் இப்படி வதந்தி பரப்பி வருவதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து 20 நாட்களாக சிறையில் இருக்க வைத்தவர் தான் இந்த சமீர் வாங்கடே. போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக பணியாற்றும் இவர் ஏற்கனவே தம் மீதான குற்றச்சாட்டு ஒன்றில் துறை ரீதியான உள் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது சகோதரி யாஸ்மின் வழக்கறிஞராக உள்ளதால் அவர் மூலம் இந்த வழக்கை நடத்த போதைப் பொருள் வியாபாரி ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அதன் அடிப்படையில் சமீர் வாங்கடேவின் சகோதரி யாஸ்மின் வாங்கடே தனது விசிட்டிங் கார்டு மற்றும் இருப்பிட முகவரி உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே அந்த வாட்ஸ் அப் சாட் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப்மாலிக், போதைப் பொருள் வியாபாரியுடன் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் சகோதரிக்கு என்ன பேச்சு வேண்டியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் சமீர் வாங்கடே தனது வழக்கறிஞர் சகோதரியுடன் இணைந்து தனி ஆவர்த்தணம் செய்து வருவதாகவும் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு சமீர் வாங்கடேவுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது எனத் தெரியவில்லை எனவும் சாடியிருக்கிறார். மொத்தத்தில் தாம் ஒரு நேர்மையான அதிகாரி என்று வெளிவேஷம் போடுகிறார் என்கிற ரீதியில் சமீரை விமர்சித்திருந்தார் நவாப் மாலிக்.
இதனிடையே போதைப் பொருள் மாஃபியாக்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதற்கான பணிகளை பின்னிருந்து இயக்கி வருவதாகவும், தன்னை போதைப் பொருள் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு கேட்டதை தொடர்ந்து இது போன்ற வழக்குகளை ஏற்று தாம் நடத்துவதில்ல எனக் கூறி தனது சகோதரி விலகிவிட்டதாகவும் சமீர் வாங்கடே விளக்கம் அளித்திருக்கிறார். நவாப் மாலிகிற்கு அறிவு கிடையாததால் தான் இப்படி பேசி வருவதாக பதில் கொடுத்துள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நம்பர் 1 குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரை ஜாமினில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் சமீர் வாங்கடே என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications