Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி போடும் ஷூ விலை ரூ.2 லட்சமாம்..!?

Subscribe to Oneindia Tamil

மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே அணிந்துள்ள ஷூ ரூ.2லட்சம் மதிப்புடையது என்றும் விலை உயர்ந்த ஆடைகளை வாங்க அவருக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது எனவும் மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கேள்விகளால் வெளுத்து வாங்கியுள்ளார்.

அரசு ஊழியம் பார்க்கும் ஒரு நேர்மையான அதிகாரியால் எப்படி இது போன்ற ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிக்க முடியும் என நவாப் மாலிக் வினவியுள்ளார்.

Nawab malik charges about NCB officer sameer wankhede

இதனிடையே நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டையும், விமர்சனத்தையும் உறுதியாக மறுத்துள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே, நவாப் மாலிக் அறிவற்றவர் என்றும் அதனால் தான் இப்படி வதந்தி பரப்பி வருவதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் கைது செய்து 20 நாட்களாக சிறையில் இருக்க வைத்தவர் தான் இந்த சமீர் வாங்கடே. போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக பணியாற்றும் இவர் ஏற்கனவே தம் மீதான குற்றச்சாட்டு ஒன்றில் துறை ரீதியான உள் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவரது சகோதரி யாஸ்மின் வழக்கறிஞராக உள்ளதால் அவர் மூலம் இந்த வழக்கை நடத்த போதைப் பொருள் வியாபாரி ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அதன் அடிப்படையில் சமீர் வாங்கடேவின் சகோதரி யாஸ்மின் வாங்கடே தனது விசிட்டிங் கார்டு மற்றும் இருப்பிட முகவரி உள்ளிட்ட விவரங்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

இதனிடையே அந்த வாட்ஸ் அப் சாட் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மகாராஷ்டிரா மாநில அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப்மாலிக், போதைப் பொருள் வியாபாரியுடன் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியின் சகோதரிக்கு என்ன பேச்சு வேண்டியுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் சமீர் வாங்கடே தனது வழக்கறிஞர் சகோதரியுடன் இணைந்து தனி ஆவர்த்தணம் செய்து வருவதாகவும் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு சமீர் வாங்கடேவுக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது எனத் தெரியவில்லை எனவும் சாடியிருக்கிறார். மொத்தத்தில் தாம் ஒரு நேர்மையான அதிகாரி என்று வெளிவேஷம் போடுகிறார் என்கிற ரீதியில் சமீரை விமர்சித்திருந்தார் நவாப் மாலிக்.

இதனிடையே போதைப் பொருள் மாஃபியாக்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பதற்கான பணிகளை பின்னிருந்து இயக்கி வருவதாகவும், தன்னை போதைப் பொருள் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு கேட்டதை தொடர்ந்து இது போன்ற வழக்குகளை ஏற்று தாம் நடத்துவதில்ல எனக் கூறி தனது சகோதரி விலகிவிட்டதாகவும் சமீர் வாங்கடே விளக்கம் அளித்திருக்கிறார். நவாப் மாலிகிற்கு அறிவு கிடையாததால் தான் இப்படி பேசி வருவதாக பதில் கொடுத்துள்ளார்.

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நம்பர் 1 குற்றவாளியாக பிரகடனம் செய்து அவரை ஜாமினில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் சமீர் வாங்கடே என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+