மும்பையில் சாலைக்குழிகளை மூடும் தனி ஒருவன்... மகன் நினைவாக 600 பள்ளங்கள் மூடல்
Recommended Video
மும்பை: மும்பை நகர சாலைகளில் காணப்படும் குழிகளையும், பள்ளங்களையும் தனி ஒருவனாக மூடி வருகிறார் காய்கறி வியாபாரம் செய்து வரும் தாதாராவ் பில்ஹோர்.
குண்டும், குழியுமான சாலைகளால் விபத்தில் சிக்கி உயிரிழந்த தனது மகனின் நினைவாக அவர் இந்த நல்ல காரியத்தை செய்து வருகிறார்.
அவருக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தின் மூலம் இதுவரை 585 சாலைக்குழிகளை மூடியுள்ளார்.
குண்டும்,குழியுமாக
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகவும், பழுதடைந்தும் காணப்படுகிறது. அதை செப்பனிடக்கோரி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எத்தனை முறை அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் முறையிட்டாலும், அதற்கான நிதி எப்போது ஒதுக்கப்படுகிறதோ அப்போது தான் அதை சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.
உயிரிழப்பு
சாலைகளில் காணப்படும் பள்ளங்களாலும், குழிகளாலும் விபத்து நேர்வது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோர்கள் தான் இது போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு வரை செல்கிறது.
அவலம்
மும்பை ஜோகெஸ்வரி-விக்ரோலி இணைப்பு சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்து கடந்த 2015-ம் ஆண்டு தாதாராவ் பில்ஹோரின் மகன் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 16 வயது மகனை சாலைவிபத்தால் பலிகொடுத்த தாதாராவ், அதன் பின்னர் மகன் நினைவாக சாலையில் உள்ள பள்ளங்களை மூடும் பணியை தொடங்கினார்.
எதிர்பார்ப்பின்றி
கடந்த நான்கு ஆண்டுகளாக தனி ஒருவனாக அரசுடைய எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தாதாராவ் 585 சாலை பள்ளங்களை சொந்தப் பணத்தில், அதுவும் தாமே மூடியுள்ளார். தனக்கு நேர்ந்த துயரம் இனி எந்த பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அந்த காரியத்தை செய்து வருகிறார்.
சொற்ப வருமானம்
அதற்காக தாதாரவ் பில்ஹோரை பெரிய செல்வந்தர் என்றெல்லாம் எண்ண வேண்டாம். அவர் காய்கறி வியாபாரம் செய்து அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருமானம் மூலமே இந்த நல்ல செயலில் ஈடுபட்டுள்ளார்.